ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் Minneapolis, Minnesota, USA 50-0715 1நன்றி, சகோதரன் லின்ட்சே. கூட்டத்தினருக்கு மாலை வணக்கம். பேசுவதற்கு கடினமாய் உள்ளதற்காக வருந்துகிறேன். என்னைக் கேட்க முடிகிறதா? சரி. அது அருமையானது. சரியானது எதுவோ அதையே நாம் செய்ய முயற்சிக்கிறோம், தேவன் நிச்சயமாக இதை நமக்காக பொறுப்பெடுத்துக் கொள்வார். நாளை பிற்பகல் இரண்டு மணிக்குள் ஆராதனையில் இருக்க வேண்டுமென்று சகோதரன் லின்ட்சே என்னிடம் சொன்னார். நாளை பிற்பகல் இரண்டு மணி. அப்பொழுது அது யாருடைய ஆராதனையிலும் குறுக்கிடாது. ஒவ்வொருவரும்... உங்களுடைய சபை ஆராதனையிலும்... வெளியே வந்து, ஒரு ஆராதனையை உடையவர்களாயும் இருக்கலாம். எனவே அதை நினைவில் வையுங்கள். மேலும் அப்போது சில... நாளை இரவு மீண்டும் வழக்கம் போல பிரசங்க ஆராதனையோ அல்லது வழக்கமான சுகமளிக்கும் ஆராதனையோ ஏதோவொன்று இருக்கலாம். நாளை பிற்பகலில் பிரசங்கம் ஆராதனை இருக்கிறது. உங்களால் வர முடியுமானால், வரும்படி முயற்சி செய்யுங்கள். உங்களைக் கொண்டிருப்பதில் நிச்சயமாக நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். 2இங்கிருப்பவர்களில் எத்தனை பேர் கிறிஸ்தவர்களாக இருக்கிறீர்கள், உங்கள் கரங்களைப் பார்ப்போம். ஓ, அது அற்புதமாக இல்லையா? ஏறக்குறைய 99 சதவீதம் ஜனங்கள் கிறிஸ்தவர்களாக இருக்கிறார்கள். கூடியிருப்பவர்களில் பெரும்பாலான பகுதியினர் ஏற்கனவே இரட்சிக்கப்பட்டவர்களாகவும், தங்களின் இருதயத்துக்கு நேசராக இயேசுவை கண்டடைந்தவர்களாகவும் இருப்பதை அறிந்து, அதை குறித்து மகிழ்ச்சியடைகிறேன். 3இப்பொழுது, முதலில் அப்படியே வார்த்தையில் சிறிது வாசிக்க நான் விரும்புகிறேன். என் வார்த்தை தவறும், ஆனால் தேவனுடைய வார்த்தை ஒருபோதும் தவறாது. மத்தேயு புத்தகம் 9-ம் அதிகாரத்தில், 27-ம் வசனம் தொடங்கி, அவைகளை குறிப்பெடுக்கும் நீங்கள்... கர்த்தருக்கு சித்தமானால் நாளைப் பிற்பகல், “எல்லா காரியங்களையும் என்னிடம் சொன்ன ஒரு மனிதனை வந்து பாருங்கள்” என்ற பொருளில் நான் பேச விரும்புகிறேன். எனக்குத் தெரியாது, ஆனால் அவருக்குச் சித்தமானால், அப்படி செய்வேன். சரி. மத்தேயு சுவிசேஷம் 9-ம் அதிகாரம் 27-ம் வசனத்தில் நாம் இதை வாசிப்போம்: இயேசு அவ்விடம் விட்டுப் போகையில், இரண்டு குருடர் அவர் பின்னே சென்று: தாவீதின் குமாரனே, எங்களுக்கு இரங்கும் என்று கூப்பிட்டார்கள். அவர் வீட்டிற்கு வந்தபின்பு, அந்தக் குருடர் அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இதைச் செய்ய எனக்கு வல்லமை உண்டென்று விசுவாசிக்கிறீர்களா என்று கேட்டார். அதற்கு அவர்கள்: ஆம் விசுவாசிக்கிறோம், ஆண்டவரே! என்றார்கள். அப்பொழுது, அவர்களுடைய கண்களை அவர் தொட்டு: உங்கள் விசுவாசத்தின்படி உங்களுக்கு ஆகக்கடவது என்றார். உடனே அவர்களுடைய கண்கள் திறக்கப்பட்டது. இதை ஒருவரும் அறியாதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள் என்று இயேசு அவர்களுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார். அவர்களோ புறப்பட்டு, அத்தேசமெங்கும் அவருடைய கீர்த்தியைப் பிரசித்தம் பண்ணினார்கள். அவர்கள் புறப்பட்டுப் போகையில், பிசாசு பிடித்த ஊமையான ஒரு மனுஷனை அவரிடத்தில் கொண்டு வந்தார்கள். பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். (ஊமையான மனிதனைக் கட்டி வைத்திருந்தது என்னவென்று நீங்கள் கவனித்தீர்களா? ஒரு பிசாசு. அதைக் குறித்து நான் நிச்சயமுடையவனாய் இருக்கிறேன். நவீன விஞ்ஞானம் அதனுடன் உடன்படாது, ஆனால் நாம் கிறிஸ்தவர்களாக வேதாகமம் என்ன கூறுகிறதோ அதை விசுவாசிக்கிறோம்.) மேலும் ஊமையான… (சிறிது நேரம் பார்ப்போம்) மேலும்... (என்னை மன்னியுங்கள், மீண்டும் 33-வது வசனம்) பிசாசு துரத்தப்பட்ட பின்பு ஊமையன் பேசினான். ஐனங்கள் ஆச்சரியப்பட்டு: இஸ்ரவேலில் இப்படி ஒருக்காலும் காணப்படவில்லை என்றார்கள். பரிசேயரோ: இவன் பிசாசுகளின் தலைவனாலே பிசாசுகளைத் துரத்துகிறான் என்றார்கள். பின்பு, இயேசு சகல பட்டணங்களையும் கிராமங்களையும் சுற்றி நடந்து, ஜெப ஆலயங்களில் உபதேசித்து, ராஜ்ஜியத்தின் சுவிசேஷத்தை பிரசங்கித்து, ஜனங்களுக்கு உண்டாயிருந்த சகல வியாதிகளையும்... சகல நோய்களையும் நீக்கி, அவர்களை சொஸ்தமாக்கினார். அவர் நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராய் இருக்கிறார் என்று எபிரேயர் சொல்லுகிறது. அவர் ஒருக்காலும் மாறுவதில்லை, அவர் தேவன். 4மேலும் இப்பொழுது தேவனுக்கும் கிறிஸ்தவனுக்கும் உள்ள காரியங்களில் மிகவும் அற்புதமான காரியம் என்னவென்றால் தேவனுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் இடையேயுள்ள ஐக்கியத்தின் இணைப்பின்படி தேவனுடைய ஆவியினாலே வழிநடத்தப்படுகிறவர்கள் எவர்களோ அவர்கள் தேவனுடைய குமாரர்கள் எனப்படுவதே. இப்பொழுது பின்னால் இருக்கிற உங்களுக்கு என்னை கேட்க முடிகிறதா? இது சரியாக உள்ளதா? உங்களால் முடிந்தால், அங்கே பின்னால் உள்ள நீங்கள் சரியாக கேட்க முடிந்தால், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். அது அருமையானது. இந்த ஒலிபெருக்கிக்கு அப்படியே எவ்வளவு அருகில் நிற்க முடியுமோ அவ்வளவு அருகில் நான் நிற்க முயற்சித்துக் கொண்டிருக்கிறேன். அது இரைச்சல் எழுப்பலாம், எனக்குத் தெரியாது. ஆனால் உங்களை பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலுக்கும், வழிகாட்டுதலுக்கும் விட்டுக் கொடுப்பதே கிறிஸ்தவ ஜீவியத்தில் நான் கண்ட மிகச் சிறந்த காரியம். அவருடைய கிரியை ஆச்சரியமானவை, இங்கிருக்கும் எத்தனை பேர் ஆவியானவரால் எப்போதாவது வழிநடத்தப்பட்டீர்கள், உங்கள் கரங்களைப் பார்ப்போம். ஓ, என்னே, அது அற்புதமானது. தேவனுடைய ஆவியால் வழிநடத்தப்படுதல்... தேவனுடைய ஆவியேயன்றி வேறு எவரும் உங்களை பீடத்தண்டை வழிநடத்த முடியாது. தேவனுடைய ஆவியேயன்றி வேறு எவரும் உங்களை இன்றிரவு இங்கு கொண்டு வந்திருக்க முடியாது. அது சரியா? அவருடைய ஆச்சரியமானவைகளை நிகழ்த்துவதற்காகவே, அவர் புரிந்து கொள்ள முடியாத வழிகளில் அசைகிறார். 5பல நேரங்களில் வழிநடத்தப்படுதலில்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நான் சிறு பையனாய் இருந்ததிலிருந்து... ஒரு வாரம் ஞாயிற்றுக்கிழமை, நாம் அவ்வளவு நேரம் தங்கியிருக்க முடிந்தால், நான் என் சுய சரிதையைச் சொல்ல விரும்புகிறேன், ஒரு வாரம் ஞாயிறு, பிற்பகல் ஆராதனையில், (என் வாழ்க்கை பாதையில்) பாதையினூடாக என்னென்ன கண்ணீர்களும் இரத்தமும் உண்டாயிருந்தனவென்று நீங்கள் அறியலாம். யாராவது ஒருவர் அது ரோஜாக்களால் நிறைந்தது என்று எண்ணலாம், ஆனால் அது அப்படியாக இல்லை, நண்பர்களே! இப்பொழுது, அநேக சமயங்களில் நான் ஜனங்களுக்கு அவர்களுடைய வியாதிகளையும் மற்றவைகளையும் பற்றி ஏதாகிலும் எப்போதாவது சொல்ல முடிந்தால் அது நிச்சயமாக ஆவியானவரால் வழிநடத்தப்படும்போது மாத்திரமே - அதைச் செய்ய நான் அவரை அனுமதிக்க வேண்டும். எனக்கு நானாகவே ஏதோ ஒன்றை சொல்வேனாகில் அது நிச்சயமாக ஒரு தவறானதாய் இருந்துவிடும். அநேக நேரங்களில், அங்கே அநேகர் இருக்கும் போது, அது என்னை குழப்பமடையச் செய்கிறது. நான் சாவகாசமாய் இருக்கும் போது அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி, தனிப்பட்ட விதத்தில் அவர்களை தொடர்பு கொள்வதே மிகச் சிறந்த வழி. ஆனால் அப்போது அது சில நேரங்களில் இது போன்ற கலப்பு கூட்டத்தினராய் இருக்கும்போது அது என்னவென்று அறிவதும், அப்படியே அது என்னவென்று உணர்வதும் ஒரு வகையாக கடினமாகவே இருக்கிறது. ஆனால் ஆவிகளுக்கு நீங்கள் மிகவும் உணர்வுள்ளவர்களாய் இருக்கவேண்டும். 6இப்பொழுது, நாம் தெளிவாக உணர்ந்து கொள்ளுகிறோம், மேலும் ஆவிகள் உண்டென்பதை ஒவ்வொருவரும் அறிவோம். அப்போது அங்கே ஆவிகள் இருக்குமென்றால், அந்த ஆவியின் எஜமானர் ஒருவர் இருக்கத்தான் வேண்டும். ஏனெனில் அது பாவிகளின் சுபாவத்திலிருந்து ஒரு கிறிஸ்தவனாக மாற்றுகிறது. மேலும் அங்கு எங்கோ உள்ள ஒரு எஜமானர் அல்லது தலைவர் இருக்கத்தான் வேண்டும். அது தேவனே. நாம் மீட்கப்பட்டு தேவனுடைய குமாரர்களும் குமாரத்திகளுமாக மறுபடியும் அவருடன் நடக்கும்படிக்கும் தேவனிடத்தில் திரும்ப கொண்டுவரப்படும் படிக்கும் அவர் தம்முடைய குமாரனை பாவ மாம்சத்தின் சாயலாக உருவாக்கி அவரை மரிக்கும்படி இந்த பூமிக்கு அனுப்பினார். ஏதேன் தோட்டத்தில் ஆதாம் எதை இழந்தானோ, அந்த தவறின் இணைப்பை கிறிஸ்து திரும்ப அளித்தார். 7அநேக சமயங்களில் சிறிது நேரம் பேசுவதற்காக நாம் ஒன்று சேர்ந்திருக்கும் சமயத்தை நான் விரும்பினேன். ஆனால் அதற்கு எட்டு அல்லது பத்து நிமிடங்கள் மாத்திரமே கொண்டிருக்கிறோம். நான் அப்படியே என் இருதயத்தை திறந்து ஒரு சில அனுபவங்களை உங்களிடம் கூற விரும்புகிறேன். அநேக சமயங்களில், கிறிஸ்தவ நண்பர்களே... ஒரு சில கூடுதலான சுகமளிக்கும் ஆராதனைகளைக் கொள்ள நமக்கு அதிக காலம் இல்லையென்று நான் யூகிக்கிறேன். இப்போது, அந்த ஆராதனைகள் நிறுத்தப்படப் போகிறது என்று நான் பயப்படுகிறேன், இவ்விதமான ஆராதனைகள் நமக்கு முன்பாக தொல்லை இருக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள். எனவே நம்மால் முடிந்த எல்லாவற்றையும் அதில் வைக்க நாம் விரும்புகிறோம். மேலும் ஒரு வேளை நாங்கள் இவ்விடத்தை விட்டு செல்லும்போது உங்களில் அனேகரை என் ஜீவியத்தின் எஞ்சியுள்ள நாட்களில் மீண்டும் காணமுடியாமல் போகலாம். இனிமேல் ஒருபோதும் நாம் சந்திக்க முடியாமலும் இருக்கலாம். எனவே நாம் ஒருவருக்கொருவர் உத்தமமாகவும் தேவனுடன் உத்தமமாகவும் இருப்போமாக! இப்பொழுது நாம் கொண்டிருக்கும் இந்த பொன்னான தருணத்தில் அவர் நம்முடன் இடைபடுவாராக. ஒரு நாளெல்லாம் நான் உங்கள் ஒவ்வொருவருடனும் உட்கார்ந்து பேச விரும்புகிறேன். ஆனால் என்னால் அதைச் செய்யஇயலாது. அவ்வாறு செய்வேனானால் ஜெபத்தில் தேவனைத் தேடும்படி என் நேரத்தை செலவழிக்க இயலாது, ஆனால் நான் ஒரு குறித்த நேரத்தில் எங்கோ ஓரிடத்தில் உங்களை சந்திப்பேனென்று நிச்சயப்படுத்துகிறேன். நாம் ஆற்றைக் கடந்த பிறகு, நீங்கள் விரும்பும் எல்லா நேரத்தையும் நான் - நான் உங்களுடன் செலவழிப்பேன். ஜீவக்கடலினால் என்றென்றும் பசுமை மாறா விருட்சத்தின் கீழ் அப்படியே உட்கார்ந்து அங்கே ஆயிரம் வருடங்களாக நாம் ஒவ்வொருவரும் பேசிக் கொண்டே இருக்கலாம். அது அற்புதமாயிருக்குமல்லவா? அந்த நேரத்தில் உங்கள் கரங்களைக் குலுக்கி “நாம் கீழே மின்னியாபோலிஸில் (தற்போது பிரசங்கித்துக் கொண்டிருக்கிற இடம்)(Minneapolis) ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் ஒருவருக்கொருவர் நாம் ஒன்றாய் இருக்க முயற்சித்த அந்த நேரத்தை நினைவிருக்கிறதா? இப்போது அது எவ்வாறு உள்ளது என்று பாருங்கள்” என்பேன். நான் வீட்டை அடையும்போது, நீங்கள் அதை அறிந்துக் கொள்ள விரும்புகிறேன், ஏன், நான் ஆற்றைக் கடந்ததும் “ஆச்சரியமான கிருபை” என்று பாடுவதற்கு முயற்சித்துக் கொண்டிருப்பேன். என்னால் பாடமுடியாது, ஆனால் அந்த பாடலை பாட எப்போதும் நான் விரும்பினதுண்டு. நான் அங்கு அடையும் போது அதைச் செய்ய தேவன் என்னை அனுமதிப்பார் என்று நான் விசுவாசிக்கிறேன். நான் அங்கு போவதற்கு முன்பாக நீங்கள் போக நேர்ந்தால் ஏதோ ஒரு காலையில் யாரோ ஒரு நபர் வெளியே நுழைவு வாயிலில் வந்து “ஆச்சரியமான கிருபை” என்று பாடுவதைக் கேட்டு நீங்கள் “சகோ. பிரான்ஹாம் வீட்டை அடைந்துவிட்டார்'' என்று சொல்வீர்கள். அது நான்தான். நான் பழைமையான பாடலை நேசிக்கிறேன். அந்த ஆச்சரியமான கிருபை தான் என்னை இரட்சித்து இம்மட்டும் கொண்டு வந்தது. 8அநேக சமயங்களில் ஆவியானவரின் வழிநடத்துதலின் ஊடாக நடக்கும் காரியங்களை நான் குறிப்பிடுவது கூட இல்லை, அதைப் பற்றி எதுவும் சொல்வதுமில்லை. தரிசனங்கள் வழக்கமாக எப்போதும் பார்க்கப்படுகிறது. அது எவ்வாறு சம்பவிக்கிறது என்பதை நான் உங்களுக்கு விளக்க முயற்சித்தேன். அது இந்த தனிப்பட்ட நபர்களுடையது. அது அவர்கள் அசைகிற விதம், அவர்கள் தங்களுடைய ஜீவியத்தில் என்ன செய்தார்கள் என்பவைகள். மேலும் நான் உங்களை பார்ப்பது எவ்வளவு நிஜமோ அவ்வளவு நிஜமாக அது அப்படியே வருகிறது. கூட்டத்தில் அது கிரியை செய்வதை பார்த்த பிறகும் யாராவது நீங்கள் அதை சந்தேகிப்பீர்கள் என்று நான் நம்பவில்லை, ஒரு கூடாரத்தில் நடைபெறும் கூட்டத்தில் பேசுவது அநேக தொல்லைகளைக் கொண்டதாயுள்ளதால் அது அதனுடைய ஸ்தானத்தை இன்னும் பெறவில்லை, நாம் ஒருவருக்கொருவர் புதியவர்களாயுள்ளோம். இங்கே அது புதியதாயுள்ளது. ஆனால் நீங்கள் அதை அற்புதவிதமாக ஏற்றுக் கொண்டதற்காக நான் மிகவும் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். நான் ஒவ்வொரு இரவும் எப்போதும் உணர முடிகிறது. எல்லா நேரத்திலும் விசுவாசமானது அதிக உந்து விசையுடன் (Momentum) எழும்புவதை காண முடிகிறது. தேவன் அனுமதித்தால், கூட்டம் முடியும் முன்னால், நீங்கள் இதற்கு முன் கண்டிராத ஒரு மகத்தான துப்புரவாக்குதல் இருக்கப் போகிறது என நம்புகிறேன். அது சரியாக எவ்வளவு அருகாமையில் உள்ளது என்பதைப் பாருங்கள். 9கவனியுங்கள், சில நேரங்களில் அவர் காரியங்களை எனக்குக் காட்டுகிறார், நான் அதை ஒருபோதும் பேசுவது இல்லை. இப்பொழுது சரியாக இப்பொழுதே, நான் இங்கே நின்று கொண்டிருந்த முதல், இங்கே இந்த ஒலிப்பெருக்கியில் பேச துவங்கினது முதல் ஏற்கனவே கடந்து போன நான்கு அல்லது ஐந்து காரியங்களை நான் பார்த்துவிட்டேன். ஆனால் ஏதாவதொன்று சம்பவிப்பதை நான் காணுமட்டாக நான் அதை பேசுவதில்லை. என்னுடைய மேலாளர் மற்றும் அவர்களும் அநேக சமயங்களில்... இப்பொழுது ஊழியக்காரர்களும் மற்றவர்களும் மிகவும் ஆவிக்குரிய சிந்தை உடையவர்களாய் இல்லையென்றால் சரியாக இப்பொழுதே அதை அப்படியே கிரகிப்பது, சற்று வினோதமாகவும் மேலும் ஒருவேளை ஒரு வகையான கடினமானதாகவும் தோன்றும் என்பதை நான் அறிவேன். ஆனால் என்னால் முடிந்ததெல்லாம் உத்தமமாயிருப்பதே. 10இங்கே சில நாட்களுக்கு முன்பாக, நாங்கள் இங்கிலாந்தில் சந்தித்த போது (வெறுமனே இரண்டு அனுபவங்கள்), ஒரு நாள் நான் என் அறையில் இருந்தேன், நான் உள்ளே சென்று என் மேலாளரிடம் கூறினேன், நான் சொன்னேன். நான் அறையில் உட்கார்ந்து கொண்டு சாத்தான் எங்களிடம் வருவதாக ஒரு தரிசனம் கண்டேன்... (ஒலி நாடாவில் காலியிடம் - ஆசிரியர்.)... அது சம்பவிக்க எவ்வளவு காலம் ஆகும் என்றும், எங்கோ ஓரிடத்தில் சுமார் இருபத்திநான்கு மணிநேரத்துக்குள் ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் சம்பவிக்கும் என்றும் அவர்களிடம் சொன்னேன், அது அங்கே சம்பவித்தது. 11ஒரு நாள் காலை, சுமார் ஐந்து மணியளவில் எழுந்து பட்டணத்துக்குள் சென்று கொண்டிருந்ததை நினைவு கூருகிறேன். அவர் என்னை எழுப்பினார்; அவர், “உன் ஆடைகளை அணிந்துகொள்” என்றார். நான் பட்டணத்துக்கு சென்றேன், நான் சுமார் 3 மைல்கள் நடந்தேன். அவ்வாறு தான் என்று நான் நம்புகிறேன்... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்) நான் ஒரு ஆற்றின் அருகில் ஒரு மரத்தின் கீழ் போய் ஒன்பது மணி வரை ஜெபித்தேன், ஐந்து மணியிலிருந்து ஒன்பது மணி வரை சுமார் ஒன்பது மணிக்கும் என்னை அவர் போக விடவில்லை. நான் தங்கியிருந்த என்னுடைய அறையில் அங்கே நான் இல்லாததற்காக அவர்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருந்தார்கள் என்பதை நான் அறிந்தேன். எனவே நான் ஜெபித்துக் கொண்டிருந்தேன். நான், “இப்பொழுது எழும்பு” என்ற அவருடைய சத்தத்தைக் கேட்டேன். நான் எழுந்தேன். 12இப்பொழுது, நண்பர்களே இது வெறும் கற்பனை அல்ல. (தேவனுடைய) அவருடைய சத்தம் என்னுடைய சத்தம் உங்களுக்கு கேட்பது போல் கேட்க கூடியதாய் இருக்கிறது. அவர் அங்கே நிற்கின்றபோது, அது வெறுமனே உங்கள் கற்பனை அல்ல, அவர் பேசுகின்ற போது நான் அவரைக் கேட்கிறேன், அவரை பார்க்கிறேன். நீங்கள் என்னோடு பேசுவது அல்லது நான் உங்களோடு பேசுவது போல அவரிடம் பேசுகிறேன். அது ஒரு ஜீவிக்கிற ஒன்று, “அது வெறும் கற்பனை அல்ல”. மேலும் அவர் தன்னுடைய பாதத்தை கீழே பதித்து நடக்கும் போது அச்சத்தத்தை நான் கேட்கிறேன். அவர் பேசும் போது நான் பேசுவதுபோல் அப்படியே அவர் பேசுகிறார். ஓ, அவர் பேசும் ஒரு - ஒரு வார்த்தை ஒரு வகையில் மிகவும் தாழ்மையானதாகவும் வேறொரு வகையில் மிகவும் கண்டிப்பானதாகவும் உள்ளது. அவருடைய உருவம் அது, எந்த மனிதனாலும் வரையப்பட முடியாது. அவர் சாதாரணமாக பேசுவாராகில் அது உலகத்தை தலைகீழாக்கிவிடும். அவரைப் பார்க்கும்போது மிகவும் சாந்தமுள்ளவராக இருப்பினும் நீங்கள் பெரும்பாலும் அழுதே விடுவீர்கள். 13மேலும் அவர் “எழுந்திரு” என்றார். நான் எழும்பி நடக்கத் தொடங்கினேன். நான் சுமார் ஒரு மைல் தூரம் நடந்தேன், மேலும்... நான் அதற்கு முந்தின நாள் கண்ட ஒரு கடைக்குச் சென்று கொண்டிருந்தேன். என்ன செய்வதென்று நான் அறியவில்லை, நடக்க மாத்திரம் செய்தேன்; அவர் “நட” என்று சொன்னார். நான் அப்படியே இந்த மூலையைச் சுற்றி செல்வேன் என்று நினைத்தேன். மேலும் நான் மூலையை சென்றடைந்தேன்; அவர் “உன் வலதுபுறம் திரும்பு” என்றார். நான் வலப்பக்கத்தில் இரண்டு சதுக்கத்தை (கட்டிடங்கள்) கடந்து சென்றேன், மேலும் அப்போது, “உன் இடதுபுறம் திரும்பு” என்றார். 14ஒரு நொடிப்பொழுதில் முந்தின இரவு இருந்த என் மொழி பெயர்ப்பாளரை நான் கண்டேன். மேலும் ஏதோவொன்று சம்பவிக்கப் போகிறது என்பதை அறிந்தேன், ஏனெனில் அவர் (தேவன்) அப்படியே என்னிடம் நெருங்கி நெருங்கி வந்து கொண்டிருந்தார். என்ன சம்பவிக்கப் போகிறது என்பதை நான் அறிந்தேன்; அது அப்போதே நடக்கப்போகிறது. அவர் (மொழிபெயர்ப்பாளர்) என்னிடம் வந்து என் கரத்தைக் குலுக்கினார். மேலும் அங்கே அவர், “சகோதரன் பிரான்ஹாம், இது ஏதோ ஒரு விசித்திரமானதாய் உள்ளது” என்றார். நான், “ஒரு நிமிடம்” என்றேன், நான் அவரிடம் சொல்லத் தொடங்கினேன். அவர் என்னை நோக்கினார். அவர் அதைச் செய்தபோது, முந்தின இரவு அவர் மொழி பெயர்த்துக் கொண்டிருந்த போது நாங்கள் அங்கே நின்று கொண்டிருந்ததை ஒரு தரிசனத்தில் நான் பார்த்தேன். நான், “நீங்கள் அப்படியே மருத்துவமனையிலிருந்து வருகிறீர்கள், இல்லையா?” என்றேன். அவர் “ஆம் ஐயா” என்றார். நான் “உங்களின் சிறுநீரகத்தில் ஒன்று நீக்கப்பட்டுள்ளது” என்றேன். அவர் “அது சரியே” என்றார். அதற்கு முந்தின தினம் தான் அவரை நான் சந்தித்தேன். அந்த இரவு மேடையிலிருந்தது மாத்திரமே. “சுமார் மூன்று அல்லது நான்கு வருடங்களுக்கு முன் நீங்கள் ஏதோ ஒன்றைச் செய்திருக்க வேண்டும், ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை அது உண்மை தானே?” என்றேன். அவர் “அது சரியே” என்றார். நான் “அப்போது உங்களுக்கு ஒரு அறுவை சிகிச்சை நடந்தது, உங்கள் அறுவை சிகிச்சையின் போது அது மற்ற சிறுநீரகத்திற்குப் பரவியது. அது சரியா?” என்றேன். அவர் “அது சரியே” என்றார். நான், “சென்ற இரவு சபையாருக்கான ஒரு ஜெபத்தில் நான் ஜெபித்துக் கொண்டிருக்கும் போது, நீங்கள் உங்கள் கரங்களை எடுத்து மிக சுலபமாக , என்னுடைய மேற்சட்டையை இவ்விதமாக பற்றிபிடித்தீர்களல்லவா?” என்றேன். அவர் அப்படியே அழத்தொடங்கினார். அவருடைய கரங்களை மேலே உயர்த்தி “அது சரிதான், சகோதரன் பிரான்ஹாம். மேலும் அது அவ்வாறு இருப்பின் அவர் அதை உறுதிபடுத்த வேண்டும் என்று சென்ற இரவு நான் தேவனிடம் கேட்டேன். சுமார் அரை மணி நேரத்துக்கு முன்னால் அவர் என்னிடம், எழுந்து தெருவின் ஊடாக செல்லும்படி கூறினார்” என்றார். ஒரு வினாடி நேரம் தாண்டியிருந்தால் கூட அவரை பார்க்க இயலாது போயிருக்கும். அங்கே அவருடைய சுகமாக்குதல் உறுதிபடுத்தப்பட்டது. தேவன் எப்படிப்பட்ட புரிந்துகொள்ள முடியாத வழிகளில் கிரியை செய்கிறார். 15நான் மேலே சென்று சகோதரன் மூர் சகோதரன் லின்ட்சே மற்றும் அவர்களையும் சந்தித்தேன். நாங்கள் பட்டணத்தின் முக்கிய வியாபாரஸ்தலம் உள்ள இடம் நோக்கிச் சென்றோம். இன்னுமாக ஆவியானவர் என்னை அபிஷேகித்து கொண்டிருக்க அவர் என்னை அப்படியே சிறிது சுற்றி நடக்கும்படி செய்தார். நான் அநேக தடவைகள் அவ்விதமாக நடந்து கொண்டே இருந்திருக்கிறேன், ஏனெனில் அப்போது என்னால் அமைதியாக இருக்க முடியாது. பட்டணத்தின் முக்கிய வியாபாரஸ்தலத்திற்குச் சென்றோம். நாங்கள் நின்று ஜன்னலில் நோக்கிக் கொண்டிருந்தோம், மேலும் நான் “சகோதரன் மூர்” என்றேன். “ஆம்” என்றார். நான், “இப்போது பின்னால் உள்ள சாலையில் தன்னுடைய மனைவிக்காக ஜெபிக்க சொல்லும்படி கேட்கிற ஒரு மனிதன், ஒரு கருப்பு சூட்டையும் மங்கின நிற தொப்பியும் அணிந்தபடி ஒரு கட்டிடத்தின் வெளியே படியில் நின்று கொண்டிருப்பான். நான் மட்டும் அதை செய்ய முடியாது” என்றேன். அவர் “அது எப்போது சம்பவிக்கும்?” என்று கேட்டார். நான் “இந்த காலையில் ஏதொவொரு நேரத்தில்” என்றேன். நான் “ஏனெனில் அந்த தரிசனம் வந்த போது அதில் அதே காலை நேரமாய் இருந்தது” என்றேன். மேலும் நாங்கள் போய் சுமார் அரை மணி நேரம் கழிந்த பிறகு நாங்கள் ஒரு மூலையைச் சுற்றி திரும்பினோம், ஒரு கடைக்கு வெளியே படியில் ஒரு கருப்பு சூட்டையும் ஒரு - ஒரு மங்கின தொப்பியும் அணிந்துள்ள ஒரு மனிதன் வந்தான். தன்னுடைய தொப்பியை கழற்றி, “சகோதரன் பிரான்ஹாம், உங்களை சந்திப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்றார். “என்னுடைய மனைவியை இங்கே மேல்மாடியில் நான் கொண்டு வந்துள்ளேன்” என்றார். ஜேக்... சகோதரன் மூர் “அதைப்பற்றி என்ன?” என்றார். நாங்கள் உள்ளே சென்றோம். 16சகோதரன் பாக்ஸ்டர், அடுத்த மேலாளர். அந்த பிற்பகல் நாங்கள் நடந்து பட்டணத்தின் முக்கிய வியாபாரஸ்தலம் நோக்கிச் சென்று, அங்கே வீதியில் நின்று கொண்டிருந்தோம். நான், “சகோதரன் பாக்ஸ்டர், கருப்பு நிற ஆடையணிந்திருக்கும் இரண்டு ஸ்திரீகள், ஒரு கடைக்கு ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் வெளியே வந்து, நம்மை இன்னும் சிறிது நேரத்தில் நிறுத்துவார்கள் என்பதைக் காண்கிறேன்” என்றேன். நாங்கள் சுமார் இரண்டு சதுக்கங்கள் (கட்டிடங்கள்) தாண்டி சென்றிருப்போம், ஒரு ஆடவர் கடையில் நான் சில கழுத்தில் அணியும் டைகளைப் (Ties) பார்த்துக் கொண்டிருந்தேன். மேலும் அப்பொழுது அதே கடையிலிருந்து கருப்பு நிற ஆடையணிந்திருந்த இரண்டு ஸ்திரீகள் வெளியே எங்களிடம் ஓடி வந்து தங்களுடைய கரங்களை கட்டிக் கொண்டு நின்றார்கள். அவர்களால் ஆங்கிலம் பேச முடியவில்லை, ஆனாலும் தங்கள் கரங்களின் மேல் அவர்களிடம் உள்ள கோளாறு என்ன என்பதை ஆவியால் பகுத்தறிய விரும்பினார்கள். சகோதரன் பாக்ஸ்டர் சொன்னார். நான் - நல்லது இப்பொழுது, அந்தக் காரியங்கள் எல்லா நேரங்களிலும் சம்பவிக்கின்றன. ஆனால் அவைகள் பிரயோஜனமானதாகவோ அல்லது நன்மையான ஏதோவொன்றாக இல்லாவிட்டால் நான் - நான் அவைகளை குறிப்பிட மாட்டேன், நண்பர்களே - அவ்விதமான ஏதோவொன்று. 17இப்பொழுது, அநேக நேரங்களில் கிறிஸ்தவர்கள் ஜெபிக்கிறார்கள். சென்ற இரவு இங்கே உட்கார்ந்திருந்த ஒரு ஸ்திரீ ஒரு சிறு குழந்தையை வைத்திருந்தாள். இப்பொழுது, இங்கிருக்கும் அநேகர் நேற்று இரவு இங்கிருந்தீர்கள். கடந்த இரவு நான் ஒரு சிறு குழந்தையுடன் இருந்த அந்த ஸ்திரீயை தேடிக் கொண்டிருந்ததை உங்களுக்கு நினைவு இருக்கிறதா? இப்பொழுது அவள் அதைக் குறித்து ஜெபித்துக் கொண்டிருந்தாள். மேலும் அறையில் நான் அவளைக் கண்டேன், அது என்ன மாதிரியான ஒரு வஸ்திரம் என்பதை என்னால் அறிய முடியவில்லை, ஆனால் அவள் தன்னுடைய தலைமயிரை பின்னியிருப்பதையும், பொன்னிற தலைமயிருடன் ஒரு சிறு குழந்தையை வைத்திருப்பதையும் நான் கண்டேன், மேலும் குழந்தை சுகமாக்கப்படுவதை கர்த்தர் எனக்குக் காட்டினார். சென்ற மாலை கட்டிடத்தை விட்டு செல்லும் முன்பதாகவே குழந்தை சுகமாகிவிட்டது. இப்பொழுது, அது அற்புதமானது. உரைக்கப்பட்ட வார்த்தை 18சமீபத்தில் ஃபோர்ட் வேய்னில் நாங்கள் ஒரு கூட்டத்தைக் கொண்டிருந்தோம். எத்தனை பேர் எப்பொழுதாவது... ஏன், போர்ட் வேய்ன் கூட்டங்களில் இருந்த யாராவது இங்கிருக்கிறீர்களா? ஒரு வேளை யாரோ ஒருவர்... ஆம், ஃபோர்ட் வேய்ன் கூட்டங்களில் இருந்த இரண்டு அல்லது மூன்று கரங்கள் இங்கே உள்ளன. வியக்கத்தக்க விதத்தில் பெருங்கூட்டம் கூடியிருந்தது. பி. இ. ரெடிகர், (B.E. Rediger) சில வருடங்களுக்கு முன்பாக இருந்த பி. இ. ரெடிகர் என்பவரை குறித்து எத்தனை பேர் எப்போதாவது கேள்விப்பட்டிருக்கிறீர்கள். பால் ரேடர் (Paul Rader), அங்கே அவருடைய கூட்டத்தில் “நம்பிடுவாய் (Only Believe)” என்ற இந்த பாடலை எழுதினார். நல்லது, திரு. ரெடிகர் சில குமாரத்திகளைக் கொண்டிருந்தார். சிறிது காலத்துக்கு முன்னால், அவர் மகிமைக்குச் சென்றுவிட்டார், தெய்வீக சுகமளித்தலில் தேசத்தின் மிகவும் தனிச்சிறப்பு வாய்ந்த மனிதர்களில் அவர் ஒருவர். 19இப்பொழுது தான் நான் புளோரிடாவிலுள்ள பென்சகோலா (Pensacola) விலிருந்து திரும்பினேன். அங்கே நான் இதுவரை கொண்டிருந்ததிலேயே மிகப் பெரிய பீட அழைப்பை நான் கொண்டிருந்தேன்: ஒரே பீட அழைப்பில் இரண்டாயிரம் பேர்கள் ஒரே சமயத்தில் தங்களுடைய இருதயத்தைக் கிறிஸ்துவுக்கு கொடுத்தார்கள். நான் வீட்டிற்கு வந்து, மேலும் நான் அந்த காலையில் சிறிய சபைக்குள் பிரவேசித்தேன். அது முழுவதும் நிரம்பி பல நூற்றுக் கணக்கானோர் சபையை சுற்றிலும் இருந்தனர். அங்கே என்னை வெளியே கொண்டுவரும்படி முயற்ச்சித்துக் கொண்டிருந்தனர். யாரோ ஒருவர் என்னிடம், “ஒரு இளம்பெண் - ஒரு மனநோயாளி சபையின் பின்னால் உள்ள நிலக்கரி கொட்டகையில் படுத்திருக்கிறாள்” என்று சொன்னார்… “திருமதி. ரெடிகர்” என்று சொன்னார். நான் “திருமதி. ரெடிகரா”? அவர்கள் “பி. இ.ரெடிகருக்கு என்ன உறவு?” என்றேன். “அது அவருடைய மகள்” என்றார். 20பி. இ. ரெடிகர் மகிமையில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் தேவனுடைய ஒரு போர் வீரர், அவருடைய மகள் ஒரு மனநோயாளி. அவருடைய மற்றொரு மகளும் அதே நிலைமையில் மரித்தாள். மனநோயாளியாக மனநோய் மருத்துவமனையில் சுமார் இரண்டு வருடங்களாக இருந்திருக்கிறாள். அவளுடைய தாய் அவளை பிடித்து வைக்கும்படி முயற்சித்துக் கொண்டிருந்தாள், ஒரு அழகான வாலிப ஸ்திரீ, அவளுடைய தலைமயிர் தொங்கிக் கொண்டிருந்தது, அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு அவளை அப்படியே பிடித்தாள், அவளுடைய கண்கள் முறைத்துக் கொண்டிருந்தவளாய் அவள் அங்கே இருந்தாள். அவள் எங்கே இருந்தாளோ அவ்விடத்திற்கு நான் நடந்தேன், அவள் பின்னால் நகரத்துவங்கினாள், அவ்விதமாக அவள் தன் வாயினால் முணுமுணுத்துக் கொண்டு “பென்னி” (Penny) அல்லது மற்ற ஏதோவொன்றை சொல்லுவது போல் சொல்லிக் கொண்டு அவ்விதமாக பின்னாக நகர்ந்தாள். எனவே திருமதி. ரெடிகர் மேலே நோக்கினாள், மேலும் நான் “ஓ, என்னே, அது சகோதரர் ரெடிகரின் மகளா?” என்றேன். “ஆம்” என்றாள். நான் “அன்புள்ள கர்த்தராகிய இயேசுவே, வாலிப பெண் மீது இரக்கமாயிரும்” என்றேன். மேலும் சத்துருவின் வல்லமை இந்த பெண்ணை விட்டு விலகும்படி கேட்டேன். ஒரு கணப்பொழுதில் அவள் தன் சுயநினைவுக்கு வந்தாள். மேலும் ஆகஸ்ட் மாதத்தில் அவள் திருமணம் செய்து கொள்ள போகிறாள், என்கிற ஒரு கடிதம் இன்று கிடைக்கப் பெற்றேன். எவ்வளவு மகிமையானது. மனநல காப்பகத்திலிருந்து வெளியே வந்தவளுக்கு, மேலும் அவருடைய வழிநடத்துதலை கண்டு கொள்வது எவ்வளவு மகிமையானது. 21ஃபோர்ட் வேய்னில் நான் எந்த ஓட்டலில் தங்கியிருந்தேன் என்பதை அவர்கள் கண்டுபிடித்தார்கள். அது இந்தியானா ஓட்டல். அவர்களுடைய முகப்பு அறையில் இருந்து வெளியே செல்வதற்கான வழியை உண்டாக்க அங்குள்ள உதவிக்கார பையன்களில் ஒருவனை கூலிக்கு அமர்த்தத்தக்கதான அளவுக்கு அங்கே ஜனக்கூட்டம் கூடியிருந்தது. குறுகிய சந்தின் வழியே சாம்பல் குவியலின் மேல் ஏதாவது சாப்பிட கிடைக்குமாவென்று அநேக ஜனங்கள் வழி நெடுக திரளாய் கூடியிருந்தனர். திடீரென ஒருநாள் நாங்கள் தெருவில் சென்று கொண்டிருந்தோம், என் மனைவி குழந்தையுடன் என்னுடன் இருந்தாள். நான் என்னுடைய கோட்டின் கழுத்துப்பட்டையை உயர்த்திக் கொண்டேன். அது... என் சிறு மகளை தூக்கிக் கொண்டு தெருவில் சென்றோம். நான் நம்புகிறேன், டோடல் விடுதி (Toddle House) அல்லது ஹோபில் விடுதி (Hobble House) அல்லது ஏதோவொன்று என்று அழைக்கப்படும் இடத்திற்கு நாங்கள் சென்றோம். அங்கே நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். கனடாவை சேர்ந்த திரு. ஏடன் (Eaton) அவர்களை அங்கு தான் காலையில் அங்கே ஒரு அறையில் சந்தித்தேன். வயிற்றுக் கோளாரிலிருந்து சுகமடையதத்கதாக கூட்டங்களில் கலந்து கொண்டபோது, தேவன் அவரை கூடாரத்தில் சில நாட்களுக்கு பிறகு சுகமாக்கினார். நான் அந்த காலையில் எங்கே சாப்பிட்டுக் கொண்டிருந்தேனோ அங்கே அவர் வரவில்லை. வெறுமனே அவர் என்னுடைய காலை உணவிற்காக பணம் செலுத்தினார். 22அடுத்த நாள் காலை தெருவில் நடந்து போய் கொண்டிருந்தோம், ஏதோவொன்று, “உன்னுடைய இடதுபக்கம் திரும்பு” என்றது. திருமதி. மார்கன், (Morgan) இருபத்தோரு வருட பட்டதாரி நர்ஸ், அதிர்வுகளினால் உணரப்பட்ட என்னுடைய முதல் புற்றுநோய் பிணியாளி, முப்பத்தேழு பவுண்டு எடையுடன் அப்படியே எலும்பும் தோலுமாய் கூட்டத்துக்கு கொண்டு வரப்பட்டாள். இப்பொழுது அவள் பரிபூரண சுகத்துடன் நூற்று ஐம்பத்தைந்து பவுண்டு எடையுள்ளவளாய் இருக்கிறாள். மேலும் தேசத்திலேயே சிறந்த மருத்துவர்கள் அவள் சிறிது நாட்கள் தான் உயிர் வாழ்வாள் என்று அவளிடம் சொன்னார்கள். அது அவளுடைய எல்லாவற்றினூடாகவும் சென்றது. அவர்கள் அவளுடைய சரீரத்தை அப்படியே திறந்து திரும்ப தையலிட்டனர். புற்று நோயானது அதன் உச்சக்கட்ட நிலையில் தீவிரமான உயிர் கொல்லியாக அவளினூடாக பரவி இருந்தது. எதுவுமே செய்ய முடியவில்லை. யார் ஒருவரும் அறுவை சிகிச்சை செய்வதற்கு கத்தியை கூட அவள் மீது வைக்க முடியவில்லை . இப்போது அவள் பரிபூரண சுகமுடையவளாய் நூற்று ஐம்பத்தேழு பவுண்டுகள் எடையுள்ளவளாய் இருக்கிறாள். 23சில நேரங்களில் பிணியாளிகளின் காரியத்தில் எனக்கு உதவி செய்யும் விதமாக எங்களுடன் வந்து கொண்டிருந்தாள். ஏனெனில் அவள் ஒரு மிகவும் புத்திகூர்மையான ஸ்திரீ. நாங்கள் போய்க் கொண்டிருந்தோம், மேலும் அது - ஏதோவொன்று “உன் இடது புறம் திரும்பு” என்றது. நீங்கள் என் சத்தத்தை கேட்பது போல அப்படியே நான் அதைக் கேட்டேன். நான் இடதுபுறம் திரும்பினேன். மார்ஜி என்னுடைய மனைவியிடம், “என்ன விஷயம்?” என்றாள். “இப்பொழுது, அவர் அப்படியே போகட்டும்” என்றாள். நான் சென்றேன். நாங்கள் நடந்து சென்றோம். கீழே இடதுபுறத்தில் மில்லர்ஸ் சிற்றுண்டி விடுதி (Millers Cafeteria) என்றழைக்கப்படும் ஒரு இடத்திற்கு முன்பாக நான் நின்றேன். ஏனென்று நான் வியந்தேன். ஏதோ ஒன்று, “இங்கே உள்ளே போ” என்றது. நான் சிற்றுண்டி விடுதிக்குள் சென்று சிறிது காலை சிற்றுண்டியையும், உலர் பழங்கள் மற்றும் அவ்விதமானவைகளை பெற்று உட்கார்ந்தேன். என் மனைவி “நீங்கள் நிச்சயமாக கண்ணியில் சிக்கும்படி இப்படிப்பட்ட ஒரு பெரிய இடத்தினுள் இருக்கிறீர்கள்” என்றாள். ஜனங்கள் சுற்றிலும் கூடியிருந்தனர். நான் சாப்பிடத் தொடங்கினேன். நான் ஆசீர்வாதத்தைக் கேட்டவாறே, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று யாரோ ஒருவர் சொல்லுவதை நான் கேட்டேன். நான் சுற்றிப் பார்த்தேன். ஒரு உரைக்கப்பட்ட வார்த்தை வயதான தாய் தன்னுடைய கண்களின் கண்ணீரைத் துடைத்தவாறே எழும்பிக் கொண்டிருந்தாள். மார்ஜி, “நீங்கள் முழு கூட்டத்துக்குமாக இல்லையென்றால் நீங்கள் போய்விடுவது நல்லது...'', என்றாள். நான் “ஒரு கணம் பொறு , இது பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதல்” என்றேன். அவள் அங்கே வந்து, “சகோதரன் பிரான்ஹாம்” என்றாள். “நான் கூட்டத்துக்குப் பின் கூட்டமாகப் பின்தொடர்ந்து என்னுடைய சகோதரனை வரிசையில் கொண்டு வர முயற்சித்துக் கொண்டிருந்தேன். நான் அதை செய்ய முடியவில்லை” என்றாள். “அவனுடைய இருதயமானது மிகவும் மோசமாக உள்ளது. இப்பொழுது அது வெளியிலிருந்து அழுத்தும் கருவியின் மூலம்(diaphragm) இயக்கப்படுகிறது” என்றாள். “வருவதற்கு சில நாட்களுக்கு முன்பதாக நாங்கள் பரிசோதித்தோம், அவன் சிறிது காலம் தான் ஜீவனோடிருப்பான் என்று மருத்துவர் சொன்னார். டெக்ஸாஸிலிருந்து இங்கு வர ஆகும் செலவிற்காக நாங்கள் எங்களுடைய பசுவை விற்றோம்” என்றாள். “நான் அநேக கூட்டங்களில் இருந்திருக்கிறேன். எங்களுக்கு உண்டாயிருந்த எல்லாவற்றையும் நாங்கள் விற்றோம்” என்றாள். “அதைப் பெற்றுக் கொள்ள முடியாததையே நான் கண்டேன், அங்கே அநேகர் இருக்கின்றனர். அநேக சமயங்களில் நான் ஒரு ஜெப அட்டையை கொண்டிருந்தேன், ஆனால் அந்த எண்கள் ஒருபோதும் அழைக்கப்படவே இல்லை” என்றாள். அவள், “ஆனால் நான் சென்ற இரவு, முழு இரவும் உபவாசித்து ஜெபித்துக் கொண்டிருந்தேன்” என்றாள். மேலும் அவள் “இந்த காலையில் ஏறக்குறைய பகல் வெளிச்சத்தில் நான் விழித்தெழுந்தேன் , மேலும் நான் ஒரு சொப்பனம் கண்டேன். நான் இங்கே இந்த சிற்றுண்டி விடுதிக்கு வந்து ஒன்பது மணிக்கு காத்திருக்க வேண்டும் என்று நான் சொப்பனம் கண்டேன்” என்றாள். நான் என்னுடைய கைக்கடிகாரத்தைப் பார்த்தேன். அது அப்படியே சரியாக ஒன்பது. “அவனை இங்கே கொண்டு வாருங்கள்” என்றேன். என்ன சம்பவித்ததென்று நீங்கள் அறிவீர்களா?, உங்களுக்கு தெரியுமா? கர்த்தர் அற்புத ஆச்சரியமாக அவனை சுகமாக்கினார். ஆவியானவரின் வழி நடத்துதல். அவர் இரு முனைகளிலும் கிரியை செய்கிறார். 24பிறகு வாசலுக்கு வெளியே சென்று, அப்படியே கடந்து போனோம். சுமார் இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு வாசலுக்கு வெளியே சென்றோம். சாப்பிடவில்லை. நான் அப்படியே கதவுக்கு வெளியே போன போது, அங்கே நின்று கொண்டிருந்த ஒரு வாலிப ஸ்திரீ தெருவில் விழுந்து கூச்சலிடத் தொடங்கினாள் - கறுப்பு நிறத்தில் உடுத்தியிருந்தாள். அவள் சிகாகோ ஹெயிட்ஸ் (Chicago Heights) - ல் வசித்தாள்: உச்சக்கட்ட நிலையில் தீவிரமாக தொற்றி பரவுகிற புற்று (Malignant cancer) நோய், “சகோதரன் பிரான்ஹாம், நான் முழுவதுமாக ஜெபித்தேன் - நான் இங்கே வருவதற்காக வாரக்கணக்காக ஜெபித்துக் கொண்டிருந்தேன்” என்றாள். “நான் சிறிது நேரத்துக்கு முன்புதான் பதிலைப் பெற்றேன்” என்றாள். அவள் இங்கே சிறப்பு மருத்துவ குழு உள்ள ஆஸ்பத்திரியில் இருந்து கொண்டிருந்தாள், மேலும் அவளுக்காக செய்யக் கூடியது எதுவுமில்லை, அவளுடைய கணவன் அங்கே இருக்கிற பெரிய வியாபாரிகளில் ஒரு மகத்தான வியாபாரி. மேலும் அவள், “இந்த அதிகாலையில்” என்றாள். “ஏதோவொன்று 9.10 மணிக்கு மில்லர்ஸ் சிற்றுண்டி விடுதிக்கு வந்து இங்கே நிற்கும்படி என்னிடம் சொன்னது” என்றாள். அங்கே அதுதான் காரியம். நான் ஒரு சில வாரங்களுக்கு முன்னால் இங்கே லிட்டில் ராக்கில் (Little Rock) அவளை சந்தித்தேன், அவள் பரிபூரண சுகத்துடனும் ஆரோக்கியத்துடனும் இருந்து அப்படியே தேவனை சத்தமிட்டு புகழ்ந்து கொண்டிருந்தாள். 25தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தோம், பரிசுத்த ஆவியானவர், “இங்கே நில்” என்றார். நான் மனைவியிடம் கூறினேன், “நீங்கள் எல்லாரும் செல்லுங்கள், அவர்கள் உங்களை ஓட்டலுக்கு கொண்டு செல்வார்கள்” என்றேன். எல்லா நேரங்களிலும் குழந்தையை அறைக்குள்ளாகவே வைத்துக் கொண்டிருந்தபடியால் அவள், “நல்லது, நான் சில புத்தகங்கள் - வண்ணம் தீட்டும் புத்தகங்களை வாங்குவதற்காக நான் மருந்துக்கடையை கடந்து அங்கே செல்வேன்” என்றாள். நான் நின்றேன், நான் திரும்பி மேலே சென்று சில மீன் பிடிக்கும் சாதனங்களைப் பார்த்துக் கொண்டே, நான் அப்படியே சிறிது நேரம் காத்திருந்தேன். “பிதாவே, நீர் என்னில் என்ன செய்ய வேண்டும் என்று இருக்கிறீர்?” என்றேன். மேலும் நான் சிறிது நேரம் காத்திருந்தேன். “மூலைக்கு போ” என்று அந்த சத்தம் சொல்லக் கேட்டேன். நான் மூலைக்கு சென்று, அந்த மூலையில் நின்று கொண்டிருந்தேன், “தெருவை கடந்து செல்” என்றது. நான் தெருவின் குறுக்காக சென்று, அங்கே நின்று கொண்டிருந்தேன். ஃபோர்ட் வேய்னிலிருந்து வருகிற ஜனங்களாகிய நீங்கள் போக்குவரத்தை அவர்கள் எவ்வாறு ஒழுங்குபடுத்துவார்கள் என்பதை நீங்கள் அறிவீர்கள். மேலும் அது... ஒரு சனிக்கிழமை காலை. நான் சிறிது நேரம் அங்கே நின்றேன். சிறிது நேரத்திற்கு பிறகு ஒரு ஸ்திரீ தெருவைக் கடப்பதை நான் கண்டேன், அநேக தடவைகள் விசில் ஊதப்பட்டது. ஒரு ஸ்திரீ தன்னுடைய கையில் ஒரு பாக்கெட் புத்தகத்தைப் பிடித்தவளாய், தெருவைக் கடந்தாள். அவள் ஒரு கட்டம் போட்ட சூட்டையும் (a checked Suit) ஒரு கட்டம் போட்ட வட்டவடிவ தொப்பியையும் (checked tam) அணிந்திருந்தாள். அவள் நடந்து போய்க் கொண்டிருந்தாள். பரிசுத்த ஆவியானவர், “அவளருகில் போ” என்றார். நான் சென்று அங்கே நின்றேன். (அநேகமாக நான் அறிந்துள்ளபடி அந்த ஸ்திரீ இன்றிரவு இந்த கூட்டத்தில் இருக்கக்கூடும்) நான் சரியாக அங்கே மூலையில் நின்றேன். மேலும் அவள் வலதுபுறத்தில் எனதருகில், கடந்து போனாள். நான், “அது விசித்திரமாயுள்ளது; அவர் ஒருபோதும் எதையும் தவறாக என்னிடத்தில் சொன்னதேயில்லை” என்று நினைத்தேன். அவள் ஏறக்குறைய அந்த கம்பம் வரையுள்ள தூரம் நடந்தாள். அவள் கீழே பார்த்தாள், பக்கவழியாக நோக்கினாள். மேலும் அவள் சுற்றிலும் திரும்பி பின்னால் பார்த்தாள்; அவள், “ஓ, சகோதரன் பிரான்ஹாமே” என்றாள். அவள் பின்னால் வந்து அழத்தொடங்கினாள். மேலும் அவள், “நான் கனடாவை சேர்ந்தவள்” என்றாள். அவள், “நான் கனடாவிலிருந்தே பின்தொடர்ந்து வருகிறேன்” என்றாள். “நான் இங்கே கடந்து வருவதற்கு ஓரளவு பணத்தை மட்டுமே அனுமதித்தார்கள்” என்றாள், “நான் கடந்த இரவு ஒரு ஓட்டலின் வராண்டாவில் உட்கார்ந்தவாறே தூங்கினேன். மேலும் இந்த காலையில் ஒரு கப் காப்பிக்காக ஒரு ஐந்து சென்ட்களை நான் கொண்டிருந்தேன்” என்றாள். ''இங்கிருக்கிற இலவசமாய் தங்கும் சத்திரம் நோக்கி போய்க் கொண்டிருந்தேன்“ என்றாள். ”நான் - சரியாக இரண்டு சதுக்கங்களை (கட்டிடங்களை) தாண்டுவதற்குள், பரிசுத்த ஆவியானவர் என்னிடம், 'உன்னுடைய வலது பக்கத்துக்குத் திரும்பு' என்றார். நல்லது, நான் வலதுபுறம் சென்றேன், - என்றாள். மேலும் அவர், “உன்னுடைய இடது பக்கத்துக்குத் திரும்பு” என்றார். ஆனால் நான் அவரால் வழி நடத்தப்பட்டு கொண்டிருந்தேன், “திரும்பி சுற்றிலும் பார்” என்றார். “சகோதரன் பிரான்ஹாம், என்னுடைய கரம் முடமாய் இருக்கிறது” என்றாள். நான் “கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அந்த கரத்தை என்னிடம் கொடு” என்றேன். மேலும் இங்கே அந்த கரம் நேரானது. ஒரு பெரிய ஐரிஷ் காவலர் விசிலை ஊதி, “நீங்கள் யாரென்று எனக்கு தெரியும், சகோதரன் பிரான்ஹாம்” என்றார். என்னே, சிறிது நேரத்துக்கு தெருவில் ஒரு ஜெப வரிசையை நாங்கள் நடத்தினோம். எல்லா இடத்திலும் அது அப்படியே இருந்தது. அது என்ன? தேவ ஆவியால் வழிநடத்தப்படுதல். அது தான், காரியம் நண்பர்களே. 26சமீபத்தில் டல்லாசுக்கு போகும் வழியில் (Dallas) (நான் மிகவும் துரிதப்படுகிறேன்), டல்லாசுக்குப் போய்க் கொண்டிருந்தபோது விமானம் தரையிறங்கியது. நான் நினைத்தேன், ஓ என்னே முழு இரவும் நான் தங்கினேன், அடுத்த நாள் காலையில் நான் அஞ்சல் பெட்டியில் என்னுடைய கடிதங்களைப் போடுவதற்காக போய்க் கொண்டிருந்தேன். அவர்கள் வந்து எங்களை அழைத்து செல்வதாக சொல்லி இருந்தனர். நான் தெருவில் சென்று கொண்டிருந்தேன், பெந்தேகொஸ்தே கூட்டத்தினர் பாடும் “அவர்களில் நானும் ஒருவன் என்று சொல்ல முடிவதால் சந்தோஷமே” என்னும் அந்த சிறிய பழைய கிறிஸ்தவ பாடலை பாட முயற்சித்துக் கொண்டிருந்தேன். நீங்கள் அதை எப்போதாவது கேட்டு இருக்கிறீர்களா? அது ஒரு... மக்கள் பெரும்பாலும் எங்கும் இருக்கின்றனர், இதயங்கள் எல்லாம் கொழுந்து விட்டு எரிகின்றன, அக்கினி மேலே விழ… பரிசுத்த ஆவி நம்மையெல்லாம் ஒரே விதமாய் உருவாக்குகிறது, (அல்லது அவ்விதமாக ஏதோவொன்று) நான் தெருவில் சென்றவாறே அதை பாட முயற்சித்துக் கொண்டிருந்தேன். என் கரத்தில் என்னுடைய கடிதங்களை கொண்டவனாய் தெருவில் நடந்து போய்க் கொண்டிருந்தேன். நான் தெருவை கடக்க ஆரம்பித்தேன். பரிசுத்த ஆவியானவர் ''நில்! நீ சரியாக ஒரு வங்கியின் முன்பாக இருக்கிறாய்“ என்றார். - மெம்பிஸ், டென்னஸி (Memphis, Tennessee). “ஓ என்னே! இது என்ன?'' என்று நினைத்தேன். நான் ஒரு மூலைக்கு நடந்து சென்று, நான் “பிதாவே நீர் என்னில் என்ன செய்ய வேண்டுமென்று இருக்கிறீர்?” என்றேன். சிறிது நேரம் அமைதியாக நான் நின்றேன். ஏனென்றால் அதை குறித்து நான் சிந்திக்காமல் இருந்தேன். நான் உண்மையான விசித்திரமான உணர்ச்சி என் மேல் அசைவதை நான் உணர்ந்தேன். ''பின்னால் திரும்பிபோ'' என்றார். ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் மேலும் நான் சரியாக திரும்பிச் சென்று மறுபடியும் ஓட்டலை கடந்து போனேன். அப்படியே, தெருவில் போய்க் கொண்டிருந்தேன். “ஓ, நானும் அவர்களில் ஒருவன் என்று சொல்ல முடிவதற்காய் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்” என்ற பாடலை எனக்குள்ளே ரீங்காரம் செய்து கொண்டு போய்க் கொண்டிருந்தேன்... நான் மெம்பிஸின் மற்றொரு பக்கத்தில் இருக்கிற கருப்பினத்தார் உள்ள மாவட்டம் போகும் வழியாக கடந்து போனேன். “நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்” என்று நான் நினைத்தேன். அப்படியே ஆவியானவரால் வழி நடத்தப்பட்டுக் கொண்டிருந்தேன். மேலும் நான் நோக்கினேன். “இந்தப் பாதையை கடந்து செல்” என்றார். நான் தெருவை கடந்து மறுபக்கத்துக்குச் சென்றேன். நான் அங்கே போய்க் கொண்டே இருந்தேன். என்னுடைய வலது புறம் திரும்பி இந்த வழியாக அந்த தெருவில் போனேன். அங்கே எல்லாம் சிறு வெள்ளை அடிக்கப்பட்ட இடங்களாய் இருந்தது. கருப்பின மக்கள் வசிக்கும் சிறிய கருப்பின் பகுதியாய் இருந்தது. 27மேலும் நான் கடந்து சென்றேன். நான் ஒரு வயதான தன் இனத்தை பிரதிபலிக்கும் விதத்தில் இருந்த ஆன்ட்டி ஜெமிமாவை ஒரு சட்டையுடன், தன்னுடைய தலையை சுற்றிலும் ஆடவர் சட்டையை கட்டினவளாய் வாசலின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்ததைக் கண்டேன். சூரியன் மேலே எழும்பி வந்து கொண்டிருந்தான், வாசலைச் சுற்றிலும் ரோஜாக்கள். ரோஜாக்களினின்று வெளிவரும் நறுமணத்தை சூரியன் முத்தமிட்டு எடுக்க மேலும் அது காற்றில் முழுவதும் நிரம்பி இருக்க பறவைகள் பாடி கொண்டிருந்தது. எவ்வளவு மகிமை! மேலும் நான் ஆவியானவரால் வழி நடத்தப்பட்டவனாக பாடிக் கொண்டே என் கரத்தை இவ்விதமாக வைத்துக் கொண்டு போய்க் கொண்டிருந்தேன். நான் கடந்து போகிற போது அவளை நான் நோக்கி பார்த்தேன். அவள் வெளி வாசல் கதவின் மீது சாய்ந்து நின்று கொண்டிருந்தாள். அவள், “காலை வணக்கம், பார்சன்” என்றாள். கீழே தெற்கில், அது பார்சன், நீங்கள் அறிவீர்கள்... (பாஸ்டர்) என்பதற்கு பதிலாக... நான், “காலை வணக்கம், ஆன்ட்டி” என்றேன். அவள் தன்னுடைய கண்களிலிருந்து வந்த கண்ணீர்களை துடைத்துக்கொண்டு சிரிக்கத் தொடங்கினாள். “நான் ஒரு பார்சன் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்? உங்களுக்கு என்னைத் தெரியுமா?” என்றேன். அவள், “இல்லை , ஐயா” என்றாள். “நான் பார்சன் என்று நீங்கள் எப்படி அறிவீர்கள்?” என்றேன். “பார்சன், வேதாகமத்திலுள்ள ஒரு ஸ்திரீயாகிய சூனேமிய ஸ்திரீயைப் பற்றி எப்பொழுதாவது நீங்கள் கேட்டிருக்கிறீர்களா?” என்றாள். நான் “ஆம்” என்றேன். “கர்த்தர் அவளுக்கு ஒரு பிள்ளையைக் கொடுத்தாரா?” என்றாள். நான் “ஆம்” என்றேன். “நானும் கூட மலடியாயிருந்த ஸ்திரீதான். கர்த்தர் எனக்கு ஒரு மகனைக் கொடுத்தார்” என்றாள். மேலும், “கர்த்தருக்காக அவனை நான் வளர்ப்பேன் என்று நான் வாக்களித்தேன்'', ”என்னால் முடிந்த அளவு சிறந்ததை செய்து இருக்கிறேன்“ என்றாள். ஆனால், ”பார்சன், தவறான பாதையை அவன் எடுத்துக்கொண்டான்“ என்றாள். ”அவன் ஒரு அருமையான வாலிபன், மேலும், அவன் பின்வாங்கிப் போனான்“ என்றாள். மேலும் ”அவன் தவறான நண்பர்கள் கூட்டத்தினருடன் போனான்“ என்றாள். ”இப்பொழுது, இங்கே அவன் உள்ளே படுத்துக் கிடக்கிறான்“ என்றாள். ”மருத்துவர்கள் தங்களால் கூடுமான எல்லா மருந்துகளையும் அவனுக்கு செலுத்திவிட்டனர். இரண்டு நாட்களாக அவன் சுயநினைவற்ற நிலையில் இருந்து கொண்டிருக்கிறான். அவன் மரிக்கப் போகிறான் என்று மருத்துவர் சொல்லுகிறார்; “அது பால்வினை நோயாக உள்ளது” என்றாள். “கொடுக்க முடிந்த எல்லாவற்றையும் அவனுக்குக் கொடுத்து விட்டோம். ஆனால் அவர்கள் அதைக் கண்டுபிடிப்பதற்கு முன்பதாகவே, அது மிகவும் தாமதமாகிவிட்டது, அவன் மரிக்கப் போகிறான்” என்றாள். மேலும், “பார்சன், ஒரு பின்வாங்கிப் போனவனாக அவன் அங்கே மரித்துக் கொண்டு கிடப்பதை நான் அறிவேன்” என்றாள், “நான் அதை தாங்கி கொள்ள முடியவில்லை” என்றாள். “நான் ஜெபித்து, ஜெபித்து, மேலும் நான், ”கர்த்தாவே, நீர் எனக்குப் இந்த பையனைக் கொடுத்தீர், ஆனால் எலியா எங்கே இருக்கிறார்“ என்று கேட்டேன்? என்றாள், எனவே, ”நான் ஜெபித்தேன், மேலும் நான் ஜெபித்தேன்“ என்றாள். ”இந்த காலை, பொழுது விடிவதற்கு சற்று முன்னால“, ”இங்கே வெளியே வந்து, இந்த வெளி வாசலண்டை கதவில் நிற்கும்படி கர்த்தர் என்னிடம் சொன்னார்“ என்றாள். பனியினால் அவளுடைய முதுகு நனைந்திருந்தது. ”நான் அப்படியே இங்கே நின்றேன்“, ஏனெனில், ''ஆவியானவரின் வழி நடத்துதலில் நான் விசுவாசம் கொண்டிருக்கிறேன்” என்றாள். 28ஓ, என்னே, தேவனும் விசுவாசியும் விசுவாசத்தினுடைய பொதுவான ஸ்தலமாகிய அங்கே தான் ஒருவரை ஒருவர் சந்திக்கிறார்கள். “இங்கே நிற்கும்படி என்னிடம் அவர் சொன்னர்'' என்றாள். ''சூரியன் மேலே வந்தது'', ”நான் அப்படியே காத்துக்கொண்டே இருந்தேன். நீங்கள் தெருவினூடாக வந்தபோது“, ”நீர் ஒரு பார்சன் என்று நான் அறிந்தேன்“ என்றாள். நான், “என்னுடைய பெயர் பிரான்ஹாம்” என்றேன். அவளுடைய பெயர் என்னவென்று அவள் என்னிடம் சொன்னாள். நான், “என் கூட்டங்களை குறித்து நீங்கள் எப்பொழுதாவது கேட்டிருக்கிறீர்களா?” என்றேன். “இல்லை, ஐயா, பார்சன்” என்றாள். நான் அதைப்பற்றி அவளுக்கு சொன்னேன், அவளுடைய கன்னங்களில் கண்ணீர் வழிய தொடங்கியது. “கர்த்தர் என்னை கைவிடமாட்டார் என்பதை நான் அறிவேன்” என்றாள். 29நாங்கள் அறைக்குள் சென்றோம். அங்கே ஒரு அருமையான பெரிய பையன் படுத்திருந்தான், சுமார் நூற்று அறுபது அல்லது எழுபது பவுண்டுகள் எடையுள்ள ஒரு ஆரோக்கியமான தோற்றத்துடன், அவனுடைய கரங்களில் போர்வைகளை ஒன்று திரட்டிக்கொண்டு, “ம்ம்ம், ம்ம்ம்” என்று இதைப் போல் முணங்கிக் கொண்டிருந்தான். மேலும் அவள் அங்கே நடந்து சென்று கன்னத்தில் அவனைத் தட்டிக் கொடுத்து, “அம்மாவின் செல்லமே” என்றாள். ஒருவேளை அவன் அவ்வளவு பெரியவனாக இருந்த போதிலும்... ஆனாலும் பாருங்கள் ஒரு தாயினுடைய அன்பை; நீங்கள் எப்பொழுதுமே அம்மாவின் செல்லமாக இருக்கிறீர்கள். நீங்கள் அறிவீர்கள், அது தாயின் அன்பு. நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பது காரியமல்ல, தாயின் அன்பு அது ஒருக்காலும் மறக்கப்படாது. எனவே அவள் அவனுடைய கன்னத்தின் மீது தட்டிக் கொடுத்தவளாய், “அம்மாவின் செல்லமே” என்றாள். மேலும் நான் அவனுடைய பாதத்தை பிடித்து பார்த்தேன், அவனுடைய பாதம் சில்லென்று (cold) இருந்தது, “ஓ, என்னே, அவன் மரித்துக் கொண்டிருக்கிறான்” என்று நினைத்தேன். நான், “ஆன்ட்டி, அவன் மிகவும் பயங்கர மோசமான நிலையில் இருக்கிறான்” என்றேன். “ஆம், ஐயா, பார்சன். இனி ஒருபோதும் அவன் தன் சுயநினைவுக்கு வரமாட்டான் என்று மருத்துவர் சொல்லிவிட்டார்'' என்றாள். நான் அவனுடைய பாதத்தைப் பற்றினேன். நான், ''நாம் ஜெபிக்கலாமா?“ என்றேன். அவள், “சரி, பார்சன்” என்றாள். அவள் கீழே தரையில் முழங்கால் படியிட்டு அவள் ஜெபிக்கத் துவங்கினாள். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; அந்த வயதான பரிசுத்தவாட்டி, ஜெபித்த ஜெபமானது அவள் அதிகமாக தேவனோடு பேசினவள் என்பதை நீங்கள் அறியும்படியாக இருந்தது. ஜெபத்தினூடாக அவள் போன போது, அவள், “அன்புள்ள கர்த்தாவே, உமக்கு நன்றி” என்றாள். 30அவன் இருந்த இடத்திற்கு நான் நடந்து சென்றேன். சிறிது நேரம் அவனையே நோக்கி பார்த்து, நான் என்னுடைய கரங்களை அவன் மீது வைத்தேன். நான், “அன்புள்ள தேவனே, நீர் என்னை ஏன் இங்கே வழிநடத்தினர் என்பதை நான் அறியேன். இப்பொழுது என்னுடைய விமானம் புறப்பட தயாராக உள்ளது” என்றேன். ஆனால் நான், “நீர் என்னை ஏன் இங்கே வழிநடத்தினீர் என்பதை நான் அறியேன், ஆனால் நான் அப்படியே வழிநடத்துதலின் மூலமாக வருகிறேன். மேலும் இப்பொழுது, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், இந்த மரித்துக் கொண்டிருக்கும் பையனின் மீது அவனுடைய ஜீவனுக்காகவும், அவனுடைய ஆத்துமா இரட்சிக்கப்படுவதற்காகவும் நான் என் கரங்களை வைக்கிறேன்” என்றேன். ''அம்மா, ஓ, அம்மா“ என்றான். அவள், “அவன் பேசுகிறான், பார்சன்” என்றாள். இரண்டு நாட்களாக பேசவே இல்லை. ''அம்மா, அது வெளிச்சமாகிக் கொண்டிருக்கிறது“ என்றான். ”இங்கே உள்ளே வெளிச்சம் வந்து கொண்டிருக்கிறது, அம்மா, என்னுடைய படகு இப்பொழுது எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை நான் காண முடிகிறது“ என்றான். சில நிமிடங்களில் அவன் தரையின் மேலாக குதூகலத்தோடும், மகிழ்ச்சியோடும் இருந்தான். சுமார் ஒரு வாரம் கழித்து, மருத்துவர்கள் அவனுக்கு அந்த வியாதி இல்லையென்று அறிவித்ததாக அவனிடமிருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெற்றேன். அவன் மெம்பிஸ், டென்னஸியில் இன்றிரவு ஆரோக்கியத்தோடும் பலத்தோடும் ஜீவித்துக் கொண்டிருக்கிறான், ஏனெனில் அவனுடைய அந்த வயதான நேசத் தாய் பரிசுத்த ஆவியானவரின் வழிநடத்துதலைப் பின்பற்றினாள். எவர்கள் தேவனுடைய குமாரரும் குமாரத்திகளுமாய் இருக்கிறார்களோ அவர்கள் தேவனுடைய ஆவியால் வழி நடத்தப்படுகிறார்கள். அது சரிதானே? 31நம்முடைய தலைகளை நாம் வணங்குவோமாக. எங்களுடைய பரலோக பிதாவே, ஓ, நீர் எங்களுக்கு மிகவும் நல்லவராகவே இருந்து கொண்டிருக்கிறீர். நாங்கள் இயேசுவைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கும் போதும் அவருடைய ஆச்சரியமான கிரியைகளைக் குறித்து பேசும்போதும், கேட்கும்போதும், நேரம் மிக எளிதாக சென்றுவிடுகிறது. மேலும் இன்று அவர், “கொஞ்ச காலம், இந்த உலகம் என்னைக் காணாது” என்றார். உலகம் புரிந்து கொள்ளாது; அவர்கள் தங்களுடைய சொந்த வழியில், அவர்களுடைய சொந்த பாவமான இச்சையுடையவர்களாய் இருளில் நடக்கின்றனர். இப்பிரபஞ்சத்தின் தேவனால் அவர்கள் குருடாக்கப்பட்டுள்ளார்கள். ஆனால், “உலகத்தின் முடிவு பரியந்தம் சகல நாட்களிலும் நான் உங்களுடனே கூட இருக்கிறேன்'' என்று நீர் சொல்லியிருப்பதற்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். இன்றிரவு எங்கெல்லாம் ஒரு உத்தமமான இருதயத்தை நீர் காண்கிறீரோ, அவர்களை உம்முடைய ஆவியினால் நீர் வழி நடத்துவீராக! ஓ, தேவனே, இந்த சனிக்கிழமை இரவு, அநேக ஜனங்கள் கடைகளுக்குச் சென்று பொருட்களை வாங்கிக் கொண்டிருக்க, அனேகர் வெளியில் இருக்கிறார்கள், பட்டணத்திற்கு வெளியே முக்கிய சாலையில் அமைந்துள்ள சாலையோர உணவு விடுதி, நடத்தை கெட்ட இடங்கள், மது அருந்தும் அறைகளில் வாலிப பையன்கள் தரையில் விழுந்து கிடக்க, வாலிப பெண்கள் தவறான பாதையில், கிறிஸ்து அற்ற கல்லறையை நோக்கி நடனமாடி சென்றுக் கொண்டிருக்க, வயதான தாய்மார்களின் ஜெபங்கள் - சரியாக அவர்களுக்கு மேல் கடந்து போக... ஓ, எஜமானரே, எப்படியாவது அந்த ஜனங்களை வழிநடத்தும். இன்றிரவு அவர்களிடம் பேசும், நாளை அவர்கள் ஒரு நல்ல பழைய பாணியிலான பீடத்தில் ஓர் இடத்தைக் கண்டு பிடிப்பார்களாக, உம்முடைய ஊழியக்காரர்களாவார்களாக. கர்த்தாவே நீர் இயேசுவை சீக்கிரமாய் அனுப்புவீர் என்று நாங்கள் விசுவாசிக்கிறபடியால் இந்த கூட்டத்தின் பலனாக ஒரு பழைய மாதிரியான எழுப்புதல் வெடித்து அதன் முழு ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் வேகத்தோட இந்த பட்டணங்கள் தேசங்கள் வழியாக அடித்து கடந்து போகட்டும். எங்களை ஒன்றாக கூட்டியருளும். பிதாவே, இன்றிரவு இங்கு வியாதியோடும், தேவையோடும் உள்ள அநேகர் உம்முடைய ஆவியை இப்பொழுது உணருகின்றனர். நீர் இங்கே இருக்கிறீர் என்பதை நாங்கள் யாவரும் அறிந்திருக்கிறோம். நீர், “எங்கே இரண்டு அல்லது மூன்று பேர் கூடியிருக்கிறார்களோ, அவர்கள் மத்தியில் நான் இருப்பேன்” என்று சொல்லியிருக்கிறீர். நாங்கள் ஆவிக்குரிய உணர்வினால் தத்ரூபமாக உம்மை உணருகிறோம். நீர் இங்கிருக்கிறீர் என்று நாங்கள் அறிவோம். மேலும் இப்பொழுது, பிதாவே, ஒரு தெய்வீக வரத்தை குறித்து இந்த ஜனங்களுக்கு நான் சாட்சி கொடுத்து கொண்டிருக்கிறேன். கர்த்தாவே, நீர் பேசாவிட்டால் அவர்கள் என்னுடைய வார்த்தைகளை மாத்திரம் கொண்டிருப்பார்கள். ஆனால் நீர் பேசுவீர் என்றும், அதை நிரூபிப்பீர் என்றும், அதை குறித்து நீர் சாட்சியிடுவீர் என்றும் நான் அறிவேன். மேலும் ஆச்சரியமான தேவகுமாரனே எல்லா துதியும் மகிமையும் உமக்கே. மரணத்திற்கும், பிரிவினைக்கும், பாதாளத்திற்கும், பாத்திரமான பரிதாபமாய் இழக்கப்பட்ட பாவிகளான எங்களை, மீட்டுக் கொள்வதில் நீர் மிகவும் ஆச்சரியமானவர். ஆனால் எங்களை மீட்டுக்கொண்டீர். ஓ, நான் மீட்கப்பட்டவன் என்பதை நான் நினைக்கும் போது எப்படியாக என் இருதயம் துள்ளுகிறது. மேலும் நீர் கல்லறையினின்று எழும்பினது எவ்வளவு நிச்சயமோ அவ்வளவு நிச்சயமாய் ஏதோவொரு நாளில் ஒருபோதும் வியாதியோ அல்லது வருத்தமோ இல்லாத ஒரு புதிய சரீரத்தில் நாங்கள் வருவோம். இப்பொழுது அன்புள்ள தேவனே, இன்றிரவு இங்கு இருக்கிறவர்களை ஆசீர்வதியும். பரிசுத்த ஆவியானவர் தாமே அப்படியே சரியாக இந்த கூட்டத்தினரின் மேல் இப்பொழுது அசைவாடுவாராக! அவர்கள் ஒவ்வொருவருடனும் பேசி, ''இவர் என்னுடைய நேச குமாரன், இவரில் நான் பிரியமாயிருக்கிறேன்'' என்று சொல்லும். தேவனுடைய குமாரன், நசரேயனாகிய இயேசு இன்றிரவு அவருடைய ஆவி எங்கள் மத்தியில் அசைவாட அவர்கள் இனிமையுடன் பரிசுத்த ஆவியின் ரூபத்தில் அதை ஏற்றுக் கொண்டு மேலும் இன்றிரவு இரட்சிக்கப்பட்டு சுகமடைவார்களாக. நாங்கள் அதை உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். 32ஆம், நான் ஏற்றுக் கொள்கிறேன். அது அப்படியே... நான் ஒரு மிகவும் உணர்ச்சி வசப்படும் வகையான நபரல்ல, ஆனால் நான் இந்த இரவின் பொழுதில் இங்கே உள்ளே வந்தது முதல் ஏதோ காரணத்திற்காக என் இருதயமானது விசித்திரமாக அனலுள்ளதாய் உள்ளது. ஏனென்று நான் அறியேன். இன்றிரவு முழு கூட்டத்தினரின் மீதும் தேவன் தம்முடைய ஆவியை ஊற்றுவாரென்று நான் நம்பிக்கையாயிருக்கிறேன். நாளை, ஒரு பிரகாசமான தேவனுடைய வெளிச்சம் இந்த சிறு இடத்தை சுற்றிலும் இருக்க வேண்டும் என்று நான் ஜெபிக்கிறேன். ஓ, ஜனங்களே, உபவாசித்து ஜெபியுங்கள், ஆயத்தமாகுங்கள், இயேசு சீக்கிரமாக வருகிறார். நான் அதை விசுவாசிக்கிறேன். ஆயத்தமாகுங்கள். நாம் உலகம் முழுவதையும் ஆதாயப்படுத்திக் கொண்டாலும் நம்முடைய ஆத்துமாவை நஷ்டப்படுத்தினால் உங்களுக்குக் கிடைக்கும் இலாபமென்ன? அது நமக்கு என்ன நன்மையை செய்யும்? எந்த நன்மையும் செய்யாது. நம்முடைய முழு இருதயத்தோடும் நாம் அவரை சேவிப்போமாக. 33கூட்டத்தினரை அவர்கள் வரிசைபடுத்திக் கொண்டிருக்கும் நேரத்தில், நாம் மீண்டும் அப்படியே சிறிது நேரம் ஜெபிப்போமாக. பிதாவே, இப்பொழுது அருகில் வாரும். இயேசுவே எங்களுடன் தங்கியிரும், இன்றிரவு எங்களை ஆசீர்வதியும். இங்கே உம்மை மிகவும் ஆவலுடன் நோக்கி பார்க்கிறவர்கள் இருக்கிறார்கள். மேலும் அது இன்றிரவு எப்படியும் எங்கள் மீது எங்கள் அருகில் சுற்றிலும் சற்று கூடுதலான ஆசீர்வாதம் இருப்பது போல் தோன்றுகிறது, ஒரு வேளை நீர் எங்கள் மேல் ஆவியை ஊற்றும்படியாய் ஆவியானவரால் வழிநடத்தப்படுதல் தீர்மானித்திருக்கக் கூடும். அப்படியே அது செய்யப்பட வேண்டுமென்று நாங்கள் ஜெபிக்கிறோம், பிதாவே. இப்பொழுதே யாவரையும் சுகப்படுத்தும். என்னுடைய பிறப்பின் போது நீர் என்னிடம் அனுப்பினவரும் உம்முடைய கரத்தினால் வாழ்க்கையினூடாக என்னை வழி நடத்தினவரும் சந்தித்து பேசுகிறவருமான அவர் நான் பேசுகிற தரிசனங்களை காண்பித்தவருமான அந்த தேவனுடைய தூதனை, ஓ! இயேசுவே, உம்முடைய நாமத்தில் அவரை இப்பொழுது அனுப்பும். இருதயத்தை அறிந்து பகுத்தறியும் வரத்தினால் அவரால் தான் பகுத்தறிய முடியும். “நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள், அதற்கு அதிகமாகவும்” என்றீர். எல்லா ஜனங்களின் இருதயத்தையும் நீர் அறிவீர். எல்லா வியாதிகளையும் நீர் அறிவீர். ஜெபவரிசைக்கு வருவதற்கு முன்னமே பிலிப்பு எங்கிருந்தான் என்று நீர் சொன்னீர். கட்டப்பட்ட குதிரைகளை எங்கே கண்டு பிடிக்கலாம் என்று சொன்னீர். கடைசி பந்தியை ஆயத்தப்படுத்தும்படியாக காலியான அறை எங்கே இருக்கிறது என்று அவர்களிடம் சொன்னீர். ஓ! அந்த ஸ்தீரியிடம் அவளுடைய பாவங்களை சொன்னீர். மேலும் அப்போது ஒருநாள் அவர்கள் உம்முடைய கண்களை ஒரு கந்தைத் துணியால் கட்டி, உம்முடைய முகத்திலிருந்த தாடியை இழுத்து உம்மீது துப்பி, “இப்பொழுது, உன்னை அடித்தது யார் என்று தீர்க்கதரிசனமாக சொல்” என்றார்கள். கர்த்தாவே, நீர் ஒரு போதும் உம்முடைய வாயை திறக்கவேயில்லை. உம்முடைய மிக அருமையான ஜீவியத்திற்காகவும், நாங்கள் ஜீவிப்பதற்கு நீர் எங்களுக்கு கொடுத்திருக்கும் ஆவிக்காகவும் நாங்கள் நன்றியுள்ளவர்களாயிருக்கிறோம். இப்பொழுது எங்களுக்கு உதவிசெய்யும். ஒவ்வொரு வியாதியும் இந்த வழியாக கடந்து போவதாக, மகத்தான தரிசனங்களும் அற்புதங்களும் இன்றிரவு செய்யப்படுவதாக. இதை அருளும் கர்த்தாவே. இந்தக் காரியங்கள் செய்யப்படுவதை ஜனங்கள் காணும் பொழுது, உம்முடைய குமாரனாகிய இயேசுவின் நாமத்தில் சரியாக அப்போதே அவர்கள் உம்மை ஏற்றுக்கொள்வார்களாக. ஆமென். 34எப்படியாயினும், மகத்தான காரியங்கள் நடக்க போகிறது என்று நம்புகிறேன், நீங்கள் நம்புகிறீர்களா? கவனியுங்கள், மோசே அவனுடைய அடையாளங்களை இஸ்ரவேல் பிள்ளைகளுக்கு முன்பு ஒரு முறை செய்துகான்பித்தான், அப்போது எல்லோரும் அவனை விசுவாசித்தார்கள். அது சரிதானே? அவனுடைய அடையாளத்தை காட்ட அவன் இரண்டாவது முறை தன்னுடைய கரத்தை உள்ளே போட வேண்டிய அவசியமில்லை. மறுபடியும் அவனுடைய கோளை சர்பமாக மாற்றவேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அப்படியே விசுவாசித்தார்கள். ஆகையால் அவர் எனக்கு அடையாளமாய் கொடுத்த அடையாளம் (அவைகளில் ஒன்று) நிருபிக்கபட்டது என்று நான் சொல்லும்போது, நீங்கள் அதை ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும். அவர் இங்கு மேடையிலே சுகத்தை கொடுக்கும் அதே நேரத்திலே அங்கேயும் சுகத்தை கொடுக்கிறவராய் இருக்கிறார். நீங்கள் அவரை விசுவாசித்தால் போதும், இங்கே வருவதை குறித்து வருத்தபட வேண்டியதில்லை. நீங்கள் எங்கே இருக்கிறீர்களோ அங்கேயே அவரை ஏற்றுக்கொள்ளுங்கள், அப்பொழுது நீ உட்கார்ந்திருக்கிற இட்த்திலேயே தேவன் உனக்கு சுகத்தை கொடுப்பார். அதை விசுவாசிக்கிறீர்களா? நல்லது. நல்லது. இப்பொழுது எல்லோரும் பயபக்கியோடு ஜெபித்துக்கொண்டிருங்கள். இப்பொழுது... ஓ, நீங்கள் எல்லாரும் நான் இப்பொழுது உனருகிறது போல உனர்ந்தால் நலமாய் இருக்கும். இது அப்பேர்பட்ட உனர்வு. மிகவும் இலகுவாக இருக்கிறதை போல உங்களை உனரச்செய்யும், அவ்வளவு சமதானம். பரிசுத்த ஆவியானவர் இந்த கட்டிட்த்தில் இருக்கிறார். அவருடைய பிரசன்னம் நமக்கும் உதவி... (டேப்பில் வெற்றிடம்)...?... இப்பொழுது இங்கிருக்கிறவர்களில் ஒருவரையும் நான் அறியேன். எனக்கு தெரிந்த மட்டில் ஒரு நபர் கூட எனக்கு தெரியாது. அதேபோல் உஙகளுடைய தொல்லைகளையும் நான் அறியேன். அது தேவனுக்கு தெரியும். உங்களுடைய ஒரு பிரச்சனையையும் நான் அறியேன். ஆகவே, நான் அவர்மேல் சார்ந்திருக்க வேண்டியதாய் இருக்கிறது. ஆகவே, கிறிஸ்தவர்களே என்னுடனே சேர்ந்து ஜெபியுங்கள். 35மாலை வனக்கம், சற்று... இப்பொழுது நான் உங்களிடத்தில் கூறுவதற்கு சரியாக அமையுமட்டும் சற்று நேரம் பேசட்டும். நீங்கள் எனக்கு அந்நியராய் இருக்கிறீர்கள். நானும் உங்களுக்கு அந்நியன். இதுவரைக்கும் என் வாழ்நாளில் உங்களை சந்தித்ததேயில்லை. நீங்களும் என்னை இதுவரைக்கும் பர்த்ததேயில்லை என நினைக்கிறேன். நீங்கள் பார்கிறதர்க்கு ஆரோக்கியமாகவும் திடமாகவும் இருக்கிறீர்கள், ஆனால் உங்களுக்கு ஏதோ ஒரு தொல்லை உண்டு, அப்படி இல்லை என்றால் இங்கே இருந்திருக்க மாட்டீர்கள். நான் சற்று உங்கள் கரத்தை பிடிக்கட்டும். ஐயா, என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை ஆகவே உங்களோடு சற்று நேரம் பேச விரும்புகிறேன். நீங்கள் தேவனை விசுவாசிக்கிறீர்கள் அல்லவா? ஆம், நீங்கள் தேவன் மேல் விசுவாசம் கொண்டிருக்கிறீர்கள். தேவன் கிறிஸ்துவுக்குள் இருந்து உலகத்தை தமக்கு ஒப்புரவாக்கினார் என்று நம்புகிறீர்களா? இப்பொழுது கிறிஸ்துவுக்குள் இருந்த அதே ஆவியானது பரிசுத்த ஆவியின் ரூபத்தில் சபைக்கு ஒன்பது ஆவிக்குறிய வரங்களை கொடுப்பதற்கு பூமியின் மேல் திரும்பவும் வந்திருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுது, நீங்கள் எனக்கு புதுமுகமாயும், உங்களை குறித்து ஒன்றும் அறியாமலுமிருக்க, உங்களிடத்தில் என்ன தொல்லை இருக்கிறது என்று நான் அறிவேன் என்றால், அப்போது, ஆவிக்குறிய நபரினால் மாத்திரமே வெளிபடுத்தபட முடியும் என்று அறிவோம். நீங்கள் கவலையாய் இருக்கிறீர்கள். இல்லையா? சகோதரியே, நீங்கள் அதிகமாக மயக்கமடைகிறீர்கள். இப்பொழுது நான் உங்களுடைய சிந்தயை வாசிக்கவில்லை. உங்களுக்கு சற்று முன்பாகதான்... இப்பொழுது சபையார் இதை புரிந்து கொள்ளவார்களாக. இப்பொழுது உங்கள் மேலாக ஏதோ ஒரு வினோதமான உணர்வு வருகிறது. அது உண்மை என்றால் உங்கள் கரத்தை உயர்த்துங்கள். பாருங்கள். அது உங்கள் ஆவியோடு தொடர்பு கொள்ளும்போது அப்படி நடக்கிறது. இப்பொழுது இது என்னை பலவீனமாகுகிறது. அப்படிதான் நான் உணர்கிறேன். ஒரு தரிசனம் எனக்கு உண்டாவதற்க முன்பு எனக்கு அந்த காரியத்தைப் பற்றி தெரியாது. உங்களுக்கு கேன்ஸர் இருப்பதாக கூறியுள்ளனர். நீங்கள் அதை பற்றி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அது சரிதானே? இப்பொழுது சற்று பயபக்தியோடு இருங்கள். பயப்படாதேயுங்கள் சகோதரியே, நம்பிடுங்கள். நாம் பார்க்கலாம், இப்பொழுது பயபக்தியோடு இருங்கள். நீங்களோ பயத்தினாலே உரைந்து போயிருக்கிறீர்கள், அது...?... நான் தரிசனம் உண்டானது என்று கூறினேன், நீங்கள் என்னை பார்த்து கொண்டிருங்கள், சரியா. ஒரு மருத்துவர் அதை உங்களுக்கு ஒருபோதும் சொல்லவில்லை, ஆனால் ஒரு மனிதன் உங்களுக்கு கேன்ஸர் இருப்பதாக கூறினான். நீங்கள் ஜெபவரிசையில் வந்திருந்தீர்கள். அதன் பிறகு நீங்கள் சந்தித்த மருத்துவர் உங்களுக்கு கேன்ஸர் இல்லை என்று கூறினார். அவர் உங்களுக்கு இதை கூறினாரா... அவர் ஏதோ ஒன்றை கூறுவதை என்னால் காண முடிகிறது. அவர் ஒரு சாதாரணமான கருப்பு நிற சூட் உடை அணிந்திருக்கிறார். இப்பொழுது உண்ணுடைய பிரச்சனை உன் தொண்டையில் இருக்கிறது அல்லவா? அது சரிதான், அது உன் தொண்டையில் தான் இருக்கிறது. சகோதரியே அது நரம்பு சம்பத்தம்பட்டது, அதில் தான் பிரச்சனை இருக்கிறது. வெறுமனே உங்கள் தொண்டையில் இருக்கும் நரம்புகளில் தான் பிரச்சனை. நீங்கள் சுகமடைய போகிறீர்கள். இயேசு கிறிஸ்து...?... நீங்கள் இப்பொழுது விசுவாசிக்கிறீர்களா? பிதாவே, உம்முடைய மகள் இங்கே நிற்கிறாள். அவள் மிகவும் கவலையோடும் விடாய்த்தும் இருக்கிறாள். அவள் தான் ஏதோ குற்றம் புரிந்தது போல உணர்கிறாள்...?... இப்பொழுது, தேவனே உம்முடைய பிள்ளையை தேற்றுவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் அவள் மீது என் கரத்தை வைக்கிறேன். அவள் தொண்டையில் இருக்கும் அந்த எரிகிறது போன்ற உணர்வும், நரம்பு சம்மந்தப்பட்ட காரியமும் அவளை விட்டு போகுமாறு கேட்கிறேன். அவள் இப்பொழுதே தன்னுடைய உற்றாரிடமும் நேசமுள்ளோரிடமும் சுகத்தோடும் குணமடைந்ததும் கடந்து செல்வாளாக. சாத்தானே, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே இந்த பெண்ணை விட்டு அகன்று போ. சகோதரியே, இப்பொழுது நீங்கள் உங்கள் தலையை உயர்த்தினால் பரவாயில்லை. சகோதிரியே அவையெல்லாம் உண்மை தானே? எல்லா வார்த்தையும்...?... அந்த சகோதரி சகோ. பிரன்ஹாமிடம் பேசுகிறார் அப்படியா? நீங்கள் இப்பொழுது வீட்டிற்கு போய் விசுவாசத்தோடு நான் உங்களுக்கு கூறுகிறபடி செய்யுங்கள். மற்ற எல்லா காரியத்தை குறித்தும் மறந்துவிடுங்கள். வீட்டிற்கு சென்று புசித்து குடித்து மன மகிழ்ச்சியோடே தேவனை ஆராதியுங்கள். எல்லோரிடமும் உங்கள் சுகத்தை குறித்து கூறி தேவனை மகிமை படுத்துங்கள். கரத்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக...?... அந்த சகோதரி சாட்சி பகர்கிறார் ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. சரி, எல்லோரும் ''கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ என்று கூறுவோம். இப்பொழுது மிகவும் பயப்பக்தியோடு இருங்கள். சரி, அடுத்த சுகவீனரை கொண்டு வாருங்கள். நன்றி, சகோதரனே. 36கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. அம்மா, அழாதீர்கள். என்னை பாருங்கள் அம்மா. நீங்கள் வருத்தத்தோடே இருக்கறீர்கள், இல்லையா? ம், சற்று எழும்பி நில்லுங்கள். கருப்புக் கோட் அணிந்திருக்கும் அந்த சகோதரி...?... அவர்கள் என்னை பார்த்தார்கள், ஏதோ ஒரு காரியம் ஏற்கனவே சம்பவித்ததை நான் பார்த்தேன். உங்களுக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்கிறது அல்லவா? அது பெண்களுக்கு உண்டாகும் பிரச்சனை அல்லவா? நீங்கள் உண்ண மறுப்பதை நான் காண்கிறேன். இப்பொழுது உங்களுக்கு வயிற்றிலும் பிரச்சனை இருக்கிறது இல்லையா? நல்லது, இயேசு கிறிஸ்து உங்களை குணமாக்கிவிட்டார், நீங்கள் வீட்டிற்கு சென்று எது வேண்டுமானாலும் புசியுங்கள். அவர் உங்கள் ஜெபத்திற்கு பதில் அளித்துவிட்டார். அம்மா, கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுதுதான் அதை அறிந்தேன். நீங்கள் இப்பொழுது நல்ல தைரியத்தோடு இருங்கள். நீங்கள் ஒரு ஊழியக்காரர் அல்லவா? நீங்கள் ஒரு மேய்ப்பர் இல்லையா? உங்கள் அருகில் ஒரு பிரசங்க மேடையை பார்த்தது போன்று இருந்தது. அது உங்கள் மனைவி இல்லையா? அவர்கள் நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை இருக்கிறது. அது சரிதானே? தைரியத்தோடு தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். அது விரிவடைகிறதை நான் கண்டேன், ஆனால் அது என்னவாயிற்று என்று எனக்கு தெரியவில்லை. மேய்ப்பரே நீங்கள் இப்பொழுது தொடர்ந்து ஜெபம் செய்யுங்கள். தைரியமாயிருங்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? நீங்கள் தான் நோயாளியா? (டேப்பில் வெற்றிடம்) இருக்கிறது...?... 'கர்த்தருக்கு ஸ்தோத்திரம்“ அது ஒரு...?... உணர்ச்சிப்படத்தக்க, நீங்கள் ஏன் சற்று உணர்ச்சிவசப்பட்டிருக்கீர்கள் என சிந்திக்கிறீர்கள். இப்பொழுது அந்த பெண்ணின் விசுவாசம் அவளை குணமாக்கியது. அவளுடைய விசுவாசம் தான் அந்த காரியத்தை செய்தது. உங்களுக்கு மட்டும் நம்புவதற்கு விசுவாசம் இருந்தால் நீங்கள் எதிலிருந்து வேண்டுமானாலும் குணமடையலாம். ஆமென். 37கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக. நீங்கள் கவலையாக இருக்கிறீர்கள் என காண்கிறேன். ஆனால் என்னால்...?... நீங்கள்... முயற்சி செய்கிறீர்கள். நீங்கள் எப்படி இருக்கிறீர்கள் சகோதரியே. உங்கள் கரத்தை சற்று பார்க்கலாம். இந்த பக்கம் பாருங்கள் சகோதரியே. நீங்கள் உங்களிடம் பல காரியம் தவறுதலாக இருப்பது போன்று உணருகிறீர்கள். ஆனால் இவையெல்லாவற்றிர்கும் முக்கிய காரணம் பதட்டம் தான். நீங்கள் மிகவும் பதட்டமாயிருக்கிறீர்கள், இல்லையா? நீங்கள் இந்த விதானமாய் அநேக காலமாய் இருக்கிறீர்கள். உங்களுக்கு சிதறல் பார்வை இருக்கிறது. உங்களால் அழவும் முடியாது. அது சரிதானே? நீ சிறு பிள்ளையாக பள்ளிக்கு செல்லும் பருவத்திலிருந்தே அந்த காரியமானது உனக்கு இருக்கிறது. நான் அதை காண்கிறேன். நீ இப்பொழுது விசுவாசிக்கிறாயா? அது சரியே, நரம்புகளில் உள்ள காரியங்களினால் உன்னுடைய சுரப்பிகள்...?... சகோ. பிரன்ஹாம் அந்த சகோதரியிடம் மெல்லிய குரலில் பேசுகிறார் நீ இப்பொழுது உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா? உன் கரத்தை காட்டு. நீ மிகவும் பதட்டமாய் இருக்கிறாய் என்று உணருகிறேன். ஆகிலும் விசுவாசிக்க முயற்சிக்கிறாய். உன் தலையை திருப்பாதே. இந்த பக்கமாகவே பார்த்துக் கொண்டிருங்கள். அந்த அசைவு தரிசனத்தை தடை செய்கிறது. நீ இப்பொழுது விசுவாசிக்கிறாயா? நான் அவரை கேட்டுக் கொண்டால் இந்த நரம்பு சம்மந்தப்பட்ட பிரச்சனை உன்னை விட்டு அகன்று போகும் என்று விசுவாசிக்கிறாயா? அது சரியே. எல்லோரும் தலையை தாழ்த்தி விசுவாசத்தோடு இருங்கள். எங்கள் பரலோக தந்தையே, நீர் இந்த சகோதரியிடம் இரக்கம் பாராட்டி அவர்களை சுகமாக்க வேண்டுமாறு கேட்டுக் கொள்கிறோம், தேவனே. அவர்கள் இந்த ஜீவியத்திற்குரிய பல பல காரியங்களினால் பதட்டமாயும் விடாய்த்தும் இருக்கிறார்கள். அன்பான தேவனே, நீர் அவர்களை இந்த இரவிலே சுகமாக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். அவர்களை உம்முடைய நாமத்தினாலே ஆசீர்வதிக்கிறேன். உம்முடைய குமாரனாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அவர்களை முற்றிலுமாக குணமாக்கினீர் என விசுவாசிக்கிறேன். ஆமென். கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக, சகோதரியே. இப்பொழுது அவரை எந்த ஒரு காரியத்திலும் சந்சேகிக்க வேண்டாம். முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள்...?... சரி அடுத்த வியாதியஸ்தரை அனுப்புங்கள். 38எப்படி இருக்கிறீர்கள் ஐயா? இங்கிருக்கும் நம் சகோதரன் இப்பொழுதுதான் குணமடைந்தார்... நீங்கள்தான் ஐயா. நான் உங்களுக்காக ஜெபிக்கும் போது, உங்களுக்குள்ளாக ஒரு குளிர்ச்சியான உணர்வு ஒன்று கடந்து சென்றது, இல்லையா? நீங்கள் செய்த காரியங்கள் எல்லாவற்றையும் பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு இங்கே வெளிப்படுத்தினாரா? அது உண்மை என்றால் இங்கிருக்கும் சபையோர் அறிந்துக் கொள்ளும்படியாக உங்கள் கரத்தை உயர்த்துங்கள். நீர் ஒரு அந்நியன் இல்லையா? இப்பொழுது எத்தனை பேர் தேவனுடைய வரம் பரதத்திலிருந்து நம்மத்தியில் இறங்கியிருக்கிறது என்று விசுவாசிக்கிறீர்கள். அது சரியே. அது ஒருபோதும் விழுந்துபோகாது... இப்பொழுது உங்களுடைய சுகப்படுதல் விசுவாசத்திலானது. தேவனுடைய வரம் அது பரிபூரணமானது, பரிபூரணமானது, ஒருக்காலும் விழுந்திடாது, விழுந்திட முடியாது, ஏனென்றால் அது தேவனே. அவர் உனக்கு அவ்வளவு அருகாமையில் இருந்து அந்த காரியங்கள் எல்லாவற்றையும் அறிந்திடுவார் என்றால், அவர் உனக்கு வாக்குத்தத்தம் பண்ணினபடியே அதை உனக்கு வெளிப்படுத்துவார். “நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான்”. அது சரிதானே? இப்பொழுது சிலர் இப்படியாக சிந்திக்க கூடும்... இது மனிதனுடைய புலன்கள் தொடர்பின்றி தன் உள்ளத்தில் உள்ள எண்ணங்களைச் செயல்படுத்துதல் அல்லது தொடர்பு கொள்ளுதல் என்றும் கூறுகின்றனர். பிசாசு எப்படியெல்லாம் கொந்தளிக்கிறான் என்று நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். உஙகளுக்கு தெரியும், இயேசுவானவர் பெயல்செபூபை கொண்டு பிசாசுகளை விரட்டுகிறார் என்று கூறினார்கள். இல்லையா? அது சரிதானே? பிசாசுகளின் பிரபு என்றார்கள். அவர்கள் ஏதாவது ஒரு குறையை கண்டுபிடிக்க வேண்டும் என்று இருந்தார்கள். மக்களை பார்க்கும் போது, அவர்களுக்குள் என்ன நடக்கிறது என்று படிக்கலாம். அது தான் மக்களை அவ்விதமாக யோசிக்க செய்தது. கண்களை பார்த்து மனதில் உள்ளவைகளை வாசிப்பார்கள். ஆனால் அது அதுவல்ல நண்பனே. அது அந்த நபருக்குள்ளாக இருக்கும் ஆவியை கவர்ந்திழுக்கிறதாய் இருக்கிறது. பாருங்கள்... அவர்கள் மனிதர்கள் அல்லவா. அவர்களுடைய விசுவாசம் அதை விசுவாசிக்கதக்க அளவிற்கு வளர வேண்டியதாய் இருக்கிறது. அல்லது அதை தளர்வாய் இருக்க விடமாட்டான். பார்தீர்களா... 39அந்த முறையினை என்னவென்று கேளுங்கள்; முக்கியமாக ஊழியக்காரர்கள் இதை கவனியுங்கள். இது தான் காரியம், நன்றாக கவனியுங்கள். “நீ மக்களை உன்னை விசுவாசிக்க செய்வாயானால்,” அவர், “நீ ஜெபிக்கும் போது உத்தமமாயிரு, அப்பொழுது உன் ஜெபத்திற்கு முன்பாக எதுவும் நிற்காது” என்றார். அதற்கு நான், “நான் படிபறிவில்லாதவன், அவர்கள் என்னை நம்ப மாட்டார்கள். என்னால் சரியாக கூட பேச முடியாது. என்னுடைய குடும்பமோ மிக ஏழ்மையானது போன்ற காரியங்களை கூறினேன்.” அவரோ, “நான் உன்னுடனே கூட இருப்பேன், மக்கள் உன்னை நம்புவதற்காக உனக்கு இரண்டு அடையளங்கள் கொடுக்கப்படும்” என்றார். இப்பொழுது, அந்த அடையாளங்கள் மக்களிடம் நம்பிக்கையை மட்டும் ஏற்படுத்தும், ஆனால் சுகமளிக்காது. அவர்கள் விசுவாசம் தான் அவர்களை சுகப்படுத்தும். எத்தனை பேர் இதை புரிந்துக் கொண்டீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள். ஓ, மிக அருமை. அந்த நபரின்…?... இதோ இங்கே ஒரு நபர் நிற்கிறார். நான் இன்னுமாக அவரை பார்க்கவில்லை. எனக்கு அவரை தெரியாது. ஆனால் நான் அந்த மனிதன் எனக்கு பின்னாக நிற்க, அவர் முழு மனதோடு விசுவாசித்தார் என்றால், நான் கூறின காரியம் எல்லாம் உண்மை என்று விசுவாசிப்பார் என்றால், தேவன் உமக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று உமக்கு வெளிப்படுத்துவார். அதை விசுவாசிக்கிறீர்களா? அங்கே நின்றுக் கொண்டிருக்கிறவரே, உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறேன் என்று கூறுகிறீர்களா? வியாதியாயிருக்கிறவரே, நீங்கள் அதை உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறீரா? சரி, நான் உங்களை ஒருபோதும் தொடவில்லை. நான் உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறது என்று கூறுவேனானால், அது உண்மையா இல்லையா என்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள், இல்லையா? அது சரிதானே? நீங்கள் அது தேவனிடத்தில் இருந்து வருகிறது என்று விசுவாசிக்கிறீர்களா? சரி, இப்பொழுது நான் உங்களுக்கு கூறுகிறது போல செய்வீர்களா? அப்படியானால் நீங்கள் இப்பொழுது வீட்டிற்கு போகலாம். நீங்கள் உங்களுக்கு இருந்த இருதய நோயிலிருந்து குணமடைய போகிறீர்கள். தேவனாகிய கர்த்தரே அதை சுகமாக்கினார்…?... கர்த்தர் உங்களை…?... கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உங்களை பரிபூரணமாக்கினார். 40நாம் நம் தலையை தாழ்த்தி ஜெபம் செய்வோமாக. எங்கள் பரலோக பிதாவே, எங்களுடைய நண்பராம் இயேசு கிறிஸ்துவின் ஆவிக்காய் எங்களுடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து நன்றி செலுத்துகிறோம். அவர்தாமே இரட்சிக்கிறவராயும், குணப்படுத்துகிறவராயும், எல்லாவற்றையும் சரி செய்கிறவராயும் இருக்கிறார். இங்கு இருக்கிற எல்லோரையும்; தேவன் ஆசீர்வதிப்பாராக. கர்த்தாவே, எல்லா இடங்களிலேயும் இருக்கிற சபையோர் உம்மை விசுவாசித்து அனைவரும் சுகமடைவார்களாக. பரிசுத்த ஆவியானவர் தாமே சபையோர் மத்தியில் கடந்து சென்று வியாதியஸ்தோரையும், பாதிக்கப்பட்டோரையும் குணப்படுத்துவீராக. இரட்சிக்கப்படாதவர்களை இரட்சியும். அவர்களுக்கு உம்மை பற்றும் ஞானத்தினை அளித்திடும். அருமை இயேசுவே, நீர் சீக்கிரமாய் வந்து, ஆவியில் நிரம்பினோரையும், இரத்தினால் கழுவப்பட்டோரையும், உம்மை சந்திக்க ஆயத்தப்பட்டோரையும் சீக்கிரத்திலே எடுத்துச் சென்றிடுவீர் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தும். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே, உம்முடைய தாழ்மையுள்ள ஊழியக்காரனின் சத்தத்திற்கு செவிசாய்ப்பீராக. ஆமென். சரி, எல்லோரும் பயப்பக்தியோடு இருங்கள். இங்கு யாரோ ஒருவர் ஜெபித்துக் கொண்டிருக்கிறார். சரி, எல்லோரும் சற்று பயப்பக்தியோடு இருங்கள்…?... நண்பனே. யாரோ ஒருவர் ஜெப வரிசையில் நிற்கிறவர்… ஜெபவரிசையில் நிற்க வேண்டும் என்று அன்றொரு இரவிலே ஜெபித்திருந்தார். யாரோ ஒருவரை நான் தொடர்பு கொண்டிருக்கிறேன். மாலை வணக்கம் சகோதரியே…?... நீங்கள் அவரை உங்கள் முழு இருதயத்தோடும் நேசிக்கிறீர்களா…?... அவரை உங்கள் முழு இருதயத்தோடும் நம்புகிறீர்களா? இப்பொழுது நீங்கள் உணருகிறது அவரைதான் என்று நம்புகிறீர்களா? சரி, அப்பொழுது நீங்கள் வீட்டிற்கு கடந்து செல்லுங்கள், அந்த பெண்களுக்கான பிரச்சனை உங்களை விட்டு அகன்று போனது. நீங்கள் வீட்டிற்கு செல்லலாம், குணமடைந்தீர்கள். கிறிஸ்து உங்களை குணமாக்குகிறார். எல்லோரும், “கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” இந்த பிரகாரமாகதான் நீங்கள் அவரை விசுவாசிக்க வேண்டும். ஆமென். 41சகோதரியே, நீங்கள் மிக கடினமாக முயற்சி செய்கிறீர்கள் இல்லையா? சரி, இங்கே பாருங்கள், நீங்கள் இந்த பக்கமாக பார்க்க வேண்டுமென விரும்புகிறேன். நீங்கள் இருமுறை அசைவதை நான் கண்டேன். நான் உங்களிடம் ஒரு காரியத்தை கேட்க விரும்புகிறேன். நீங்கள் அந்த கட்டிலில் படுத்திருந்தீர்கள். நீங்கள் எனக்கு அந்நியர். உங்களுக்கு ஜெப அட்டை கிடைக்கவில்லை என்று மிகவும் ஏமாந்த நிலமையில் இருந்தீர்கள். அது சரிதானே? உங்களுக்கு ஒரு ஜெப அட்டை மிகவும் அவசியப்பட்டது. எனக்கு உங்களை தெரியாது சகோதரியே, ஆனால் இப்பொழுது உங்களுக்கு என்ன பிரச்சனை என்பதை அறிந்திருக்கிறேன். உங்களுக்கு ஏதாவது ஒரு காரியத்தை செய்யாவிட்டால் உங்கள் ஆயுசு மிகவும் குறைவாக இருக்கிறது என்று காண்கிறேன். ஏனென்றால் நீங்கள் கேன்ஸர் நோயினால் கஷ்டப்படுகிறீர்கள், அது சரிதானே. உங்களுக்கு ஏதோ ஒரு காரியத்தை செய்தாலொழிய நீங்கள் ஜீவிக்க முடியாது, அது சரிதானே? பின்பு நீங்கள் ஏன் தேவனுடைய வார்த்தையை விசுவாசிக்கக் கூடாது. ஏன் கூடாது? நீங்கள் இருதயத்தை பகுத்தறிகிற ஆவி நகர்ந்துக் கொண்டிருக்கிறது என்று இந்த காரியத்தை விசுவாசிக்கிறீர்களா. அவர்தான் சிருஷ்டியின் தேவன், அதை விசுவாசிக்கிறீர்களா? நான் அவருடைய ஊழியக்காரன் என்பதை ஏற்றுக் கொள்கிறீர்களா? நான் அவருடைய தீர்க்கதரிசி என்று விசுவாசிக்கிறீர்களா? நீங்கள் விசுவாசிகிறீர்களா? நீங்கள் அதேப்போல் எனக்கும் கீழ்படிவீர்களா? அப்பொழுது, தேவ குமாரனாம் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே அங்கிருந்து எழுந்து உன் வீட்டிற்கு சென்று குணமடைந்து சுகமாயிரு. அவ்வளவுதான். நீ எழுந்திரு. அங்கே உட்கார்ந்திருக்கும் அந்த சிகப்பு கோட் அணிந்திருக்கும் சீமாட்டியே, நீங்களும் கேன்ஸர் நோயினால் கஷ்டப்படுகிறீர்கள் இல்லையா? சரி, உங்கள் கரத்தை உயர்த்துங்கள், அது மட்டும்…?... அதோ அங்கே இன்னும் இரண்டு பேர் எழும்பி நிற்க வேண்டும். இயேசு கிறிஸ்து உங்களை குனமாக்கினார். எல்லோரும்,“கர்த்தருக்கு ஸ்தோத்திரம்” என்று சொல்லலாம். அவர் உங்களோடே இருக்கிறார் என்று விசுவாசிக்கிறீர்களா? அவர் இங்கே இருக்கிறார், நாம் எல்லோரும் எழுந்திருந்து அவருக்கு துதி செலுத்துவோம். நாம் இப்பொழுது அவரை ஆராதிப்போம். நீங்கள் அவரை நம்புவீர்களா? அவரை ஏற்றுக் கொள்வீர்களா…?... அவரை இப்பொழுதே ஏற்றுக் கொள்ளுங்கள். நீங்கள் சகோதரியே, அவரை உங்கள் முழு இருதயத்தோடு விசுவாசிக்கிறீர்களா? இப்பொழுதே அவரை ஏற்றுக் கொள்ளுங்கள்…?... நாம் எல்லோரும் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் நம் கரங்களை உயர்த்துவோம். பிதாவே, இப்பொழுதே இந்த மக்களின் இருதயத்திற்குள்ளாக கடந்து செல்லும். பரிசுத்த ஆவியானவர் தாமே தேவ குமாரனாம் இயேசுவின் நாமத்தினாலே, அற்புதங்களோடும் அடையாளங்களோடும், உம்முடைய வார்த்தையை இப்பொழுதே நிரூபித்திடும். இப்பொழுது சபையோரே, கூர்ந்து கவனியுங்கள். பாருங்கள்…